badge

Followers

Showing posts with label அட அப்படியா?. Show all posts
Showing posts with label அட அப்படியா?. Show all posts

Monday, 8 October 2018

மதுரை மீனாட்சி அம்மன் ...தனி சிறப்புகள்


 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி.

Monday, 3 September 2018

வங்கி கணக்குகளும் நாமினேஷனும்




வங்கி கணக்குகளும் நாமினேஷனும்

நேற்று நாமினேஷன் பற்றி ஒரு பதிவைப் பார்க்க நேரிட்டது. அதில் வங்கி மட்டுமல்லாது பி.எப், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றிலும் நாமினேஷன் செய்வது எப்படி என்று விளக்கியிருந்தார்கள். எனஂனடா நம்ப சப்ஜெக்ட்டில் யாரோ கோல் அடிக்கிறார்களே என்று யோசித்து கொண்டிருந்தேன். ஏதோ திரும்பி வருகிற வழியில் என்னால் முடிந்த கமென்ட் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நிறைய பேருக்கு நாமினேஷன் பற்றிய தவறான புரிதல் உள்ளது. முப்பந்தைந்து வருடங்களாக வங்கியில் நாமினேஷன் போடாதவர்களுடைய கஷ்டங்களை கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அதைப் பற்றி தெளிவாக்கும் முயற்சியே இந்தப் பதிவு.
இது சட்ட விளக்கமல்ல. நடைமுறையில் இதனை ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும் அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதன் விளக்கமே.  நாமினேஷன் வங்கி மட்டுமல்லாது பல விஷயங்களுக்கும் உள்ளது. என்னைப் பொறுத்த மட்டில் வங்கி சேவையைப் பற்றி மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

நாமினேஷன் என்றால் என்ன.

நாமினேஷன் பற்றி பேச வேண்டுமென்றால் இறப்பு பற்றி பேசாமல் தொடங்க முடியாது. (இந்தக் கொடுமையை வங்கி பணியாளர்களும், காப்பீடு பணியாளர்களும் நன்கு அறிவார்கள். தன்னுடைய பிற்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வந்த வாடிக்கையாளரிடம் ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்று சொல்லும் போது அவர் முகம் போகும் போக்கை பார்க்க சகிக்காது. )

நாம் செய்துள்ள முதலீட்டினை நமக்கு பிற்காலம் வங்கி யாரிடம் கொடுத்தால் வங்கிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை வங்கிக்கு தெரிவிக்கும் ஒரு பதிவுதான் நாமினேஷன்.

அதாவது

1.  வாடிக்கையாளரின் இறப்புக்குப் பிறகே நாமினேஷன் என்பது நடைமுறைக்கு வருகிறது. அதுவரை நாமினேஷன் என்பது வெறும் ஒரு பதிவு அவ்வளவுதான்.  வாடிக்கையாளர் இறப்பதற்கு முன்னால் நாமினேஷன் செய்யப்பட்டவரால் தலை கீழாக நின்றாலும் பணத்தை எடுக்க முடியாது.

௨. இது வாடிக்கையாளருக்கு சௌகர்யம் என்பதை விட வங்கிக்கு சௌகர்யம் என்றே ஏற்படுத்தப்பட்டது. ஒருவரது பணத்தை அவர் இல்லாத நிலையில் மற்றொருவரிடம் கொடுப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் தரும்  ஆவணமே நாமினேஷன். அவ்வாறு நாமினேட் செய்யப்பட்டவரிடம் பணத்தை கொடுக்கும் பட்சத்தில் வங்கி தனது கடமையை சரியாக செய்ததாக கருதப்படும் (bank is absolved of its liabilities by disposing the assets to the nominee)

3.  நாமினி என்றால் வாரிசு என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரின் பணத்தை அவரது பிற்காலம் அவரது சட்டபூர்வ வாரிசுகாரர்களுக்கு பங்கிட்டு கொடுப்பது மட்டுமே அவரது வேலை. வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே நாமினேஷன்.

நாமினேஷன் எப்படி செய்ய வேண்டும்.

1. புதிதாக ஒரு முதலீடு அல்லது வங்கிக் கணக்கு செய்யும் பொழுது அந்த கணக்கு தொடங்கும் படிவத்திலேயே கண்டிப்பாக நாமினேஷன் படிவம் இருக்கும் (சட்டப்படி நாமினேஷன் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  யாருக்காவது வேண்டாமென்றால் அவர்கள் எங்களுக்கு நாமினேஷன் வேண்டாம் என்று டிக்ளேர் செய்ய வேண்டும்). அந்த படிவத்தில் நாமினியின் பெயர், வயது மற்றும் உறவு முறை குறிப்பிட வேண்டும் (நண்பர் என்றும் குறிப்பிடலாம்). அந்த நபர் 18 வயதுக்குட்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில் அவர் பதினெட்டு வயது எட்டும் வரை அந்தப் பொறுப்பை யார் வகிப்பார்கள் என்றும் குறிப்பிட வேண்டும்.

௨. பழைய கணக்குகளில் நாமினேஷன் இல்லையென்றால் தனியாக பாரம் இருக்கிறது. அவற்றை நிரப்பி வங்கியில் கொடுக்கலாம்.

3. உங்களது நாமினேஷன் கணக்கில் பதிந்த பிறகு வங்கி உங்களுக்கு ஒரு அத்தாட்சி தருவார்கள். (பல சமயங்களில் உங்களது கணக்கு புத்தகத்திலோ, டெப்பாசிட் ரசீதிலோ இந்த அத்தாட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் )

4. நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே நாமினியின் பெயர் தெரியும் விதமாக பதிவு செய்யப்படும். இல்லையென்றால் பதிவு எண் மட்டுமே வழங்கப்படும் (இந்த முறை எதற்காக என்பதை பின்னால் கூறுகிறேன்)

5.  பதிவு செய்யும் நேரத்தில் நாமினி உங்களுடன் வரவேண்டிய அவசியமில்லை, அவரது கையெழுத்து தேவையில்லை. அவரது போட்டோ, அடையாள அட்டை எதுவுமே தேவையில்லை.

6. நாமினேஷன் என்பது உங்களது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்

நாமினேஷன் செய்தால் வரும் நன்மை

நாமினேஷனால் வரும் நன்மை என்பதை சொல்ல வேண்டுமென்றால் நாமினேஷன் செய்யாமலிருந்தால் வரும் தீமையைச் சொல்ல வேண்டும். உங்களது கணக்கில் நாமினேட் செய்யப்படாமலிருந்தால் அதில் இருக்கும் தொகையைப் பொருத்து உங்களுடைய வாரிசுதாரர்கள் கீழ்க்கண்ட சர்ட்டிபிகேட்டுகளுக்காக பல இடங்களில் ஏறி இறங்க நேரிடும்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. வாரிசு சான்றிதழ் (குறைந்தது 45 நாட்கள் ஆகும். வில்லேஜ் ஆபிசிலிருந்து, தாசில்தார் அலுவலகம் வரை கண்டிப்பாக ஏறி இறங்க வேண்டும்)
    3. உங்கள் சார்பாக குடும்ப உறுப்பினரல்லாத ஒருவர் வாடிக்கையாளர் இறந்த விஷயத்தையும் யாரெல்லாம் வாரிசு என்பதையும் விளக்கி வங்கிக்கு உங்களது க்ளெய்மை தர வேண்டும். அந்தப்படிவத்தை படித்து பார்த்தாலே கையெழுத்திடுவதற்கு அவர்கள் அச்சப்படுவார்கள்.
    4. வாரிசு சான்றிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் சேர்ந்தோ அல்லது அவர்கள் அனைவரும் சிபாரிசு செய்யும் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாகவோ க்ளெய்ம் செய்யலாம்
    5. குடும்பத்தில் உறுப்பினரல்லாத ஒன்றோ இரண்டோ நபரது உத்தரவாதம். (மிகப் பெரிய சிக்கல். இந்தக் காலத்தில் யார் இதை தருவார்கள்). இவ்வாறு உத்தரவாதம் செய்யும் நபரது சொத்து வங்கி அதிகாரியால் மதிப்பிடப்படும். அவரது மதிப்பு க்ளெய்ம் மதிப்பை விட கண்டிப்பாக அதிகமாக இருத்தல் அவசியம். (சில சமயங்களில் அசையாத சொத்தின் நகல் வாங்கி, சொத்தின் மதிப்பீடு செய்வது வரை நடந்திருக்கிறது)
    6. உங்களது வங்கி மேலாளரின் க்ரேடைப் பொறுத்தும் உங்களது கணக்கிலிருக்கும் தொகையைப் பொறுத்தும் செட்டில்மென்ட் செய்ய ஆகும் காலம் மாறுபடும்.

இவையெல்லாம் எழுதுவதற்கு எளிது. ஆனால் நடைமுறையில் எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

சரி நாமினேஷன் செய்யப்பட்டிருந்தால் என்ன தேவையென்பதை இப்போது பார்ப்போம்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. நாமினியின் அடையாள அட்டை
    3. விண்ணப்பம்.

அனைத்து மேலாளர்களுக்கும் நாமினேஷன் செய்யப்பட்ட கணக்கில் உடனடியாக செட்டில்மென்ட் செய்ய அதிகாரமுள்ளது. அதிக பட்சமாக ஒரு நாள் மட்டுமே.

இப்போது புரிகிறதா ? ஏன் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்.

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்

    1. வங்கியிலுள்ள அனைத்து முதலீடுகளும்
    2. லாக்கர் (ஒரே சமயத்தில் இரண்டு பேரை நாமினேஷன் செய்யலாம்)

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட மாட்டாது

    1. வங்கியில் கடனுக்காக கொடுத்திருக்கும்  நகைகள் (கோல்ட் லோன்)
    2. அனைத்து வகையான கடன்களும்

பொதுவான கேள்விகள் மற்றும் தவறான புரிதல்கள்.

கேள்வி. நாங்கள் எங்களது டெப்பாசிட்டை ஜாயின்டாக வைத்திருக்கிறோம் எங்களுக்கு எதற்கு நாமினேஷன் ?

பதில். பொதுவாகவே கணவன் மனைவி பெயரிலோ குடும்ப உறுப்பினர் பெயரிலோ ஜாயின்டாக வைத்திருப்பீர்கள். இன்றைய அவசர உலகத்தில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பொதுவாகவே கணவன் மனைவி இருவருமே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாயின்ட் அக்கவுண்ட் உங்கள் வாரிசுகளுக்கு சென்றடைவதில் சிக்கல்களை அதிகமாக்குமே தவிர குறைக்காது. ( உதாரணமாக இந்து சட்டப்படி வாரிசு என்றால், இறந்த நபரது அப்பா, அம்மா, கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் இவர்களில் யாராவது ஏற்கனவே இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களது வாரிசுகள் ). ஜாயின்ட் அக்கவுன்டாக இருந்தாலும் நாமினேஷன் செய்வதே சிறந்தது.

கேள்வி. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. யாரை நாமினேட் செய்ய வேண்டும்.

பதில். யாரை வேண்டுமானலும் செய்யலாம். அந்த நபர் உங்களது சொத்தை நிர்வகிக்கும் ட்ரஸ்டியாகிறார்.

கேள்வி. நாங்கள்தான் எங்களது சேமிப்பு கணக்கில் நாமினேஷன் செய்து விட்டோமே

பதில். எல்லா கணக்கிற்கும் தனித்தனியாக நாமினேட் செய்யப்படுவது அவசியம்

கேள்வி. நாங்கள் 30 வருடத்திற்கு முன்பே கணக்கு வைத்திருக்கிறோம். கணக்கு தொடங்கும் போதே நாமினேஷன் செய்து விட்டோம். பிறகு எதற்காக இப்போது செய்ய வேண்டும்.
பதில்.  30 வருட இடைவெளியில் வங்கிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. கணிணி மயமாக்கப்ட்ட உடன் உங்கள் கணக்கு எண் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் நாமினேஷன் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் கணக்கு தொடங்கிய சமயத்தில் நீங்கள் திருமணமாகதவராக இருந்திருக்கலாம். அப்போது உங்களது பெற்றோரையோ சகோதரர்களைோ நீங்கள் நாமினேட் செய்திருக்கலாம். இப்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி அவற்றை சரி செய்து கொள்ளவும்.

கேள்வி. நான் நாமினேட் செய்யும் நபருக்கு என்னுடைய மறைவுக்கு பிறகு வங்கி தானாக பணம் கொடுத்து விடுமா ?

பதில். சினிமாவில் தான் அதெல்லாம் நடக்கும். க்ளெய்ம் என்பது முக்கியம் நாமினி க்ளெய்ம் செய்யாத வரை வங்கிக்கு பணத்தை கொடுக்கும் அதிகாரமில்லை

கேள்வி. எதற்காக நாமினியின் பெயர் தெரியப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

பதில். உங்களுக்கு பிறகு பணத்தை திரும்பப் பெறும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தால் என்னவாகும் ? (இந்த இடத்தில் தமிழ் சினிமாவை கற்பனை செய்து கொள்ளவும். அந்த நிலைமையை போக்கவே இந்த ஏற்பாடு)

கேள்வி. எங்களது தந்தை அவரது வங்கிக் கணக்கையெல்லாம் எனது சகோதரருக்கு நாமினேஷன் மூலம் கொடுத்து விட்டு இறந்து விட்டார். அதில் எனக்கு சட்டப்படி உரிமை உள்ளதா.

பதில். கண்டிப்பாக உரிமையுள்ளது. உங்களுக்கு நியாயமான பங்கு தருவதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லையென்றால்
    1. வங்கி பணத்தை அவரிடம் ஒப்படைக்குமுன் நீதி மன்றத்தில் தடையாணை பெறலாம். அதற்கு பின் நாமினேஷன் செல்லாக் காசாகிவிடும்.
    2. வங்கி அவரிடம் பணத்தை கொடுத்து விட்டது என்றால் நீங்கள் வழக்கு தொடரந்து சட்டப்படி உங்களது பங்கை திரும்பப் பெறலாம். ஆனால் வங்கியை இழுக்க முடியாது.

நாமினேஷன் செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன ?

நாமினேஷன் செய்யாததன் காரணமாக கஷ்டங்களை அனுபவித்தவர்களை நிறைய சந்தித்திருக்கிறேன்.   இவ்வளவு சொன்னாலும் ஏன் நாமினேஷன் செய்ய மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்த சில விளக்கங்கள்.

    1. வாரிசுகளிடம் நம்பிக்கையின்மை
    2. அசட்டு நம்பிக்கை (எனக்கு ஒன்றும் நேராது. எனக்கு முன்னாடி அவ போயிறுவா)
    3. அறியாமை ( ஜாயின்ட் அக்கவுண்ட் வைத்திருக்கேன். ஆட்டோமேட்டிக்கா அவளுக்குதான் போகும் )
    4. மனைவிகளுக்கு தெரியாமல் வைத்திருக்கும் பணம். (அவளுக்கு இதெல்லாம் புரியாது)

இதையெல்லாம் படித்துவிட்டு கண்டிப்பாக உங்களது கணக்கில் நாமினேஷன் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Sunday, 15 July 2018

தேனின் பயன்கள்...



தேன்....

கொழுப்பைக் குறைக்க, நீரிழிவை கட்டுக்குள் வைக்க, வாயுத் தொல்லைகளை குறைக்க, தொற்று நோய்களை குணப்படுத்த, சக்தி கொடுக்க, குமட்டலைத் தடுக்க, உடல் எடையைக் கூட்ட, தூக்கமின்மையை போக்க, ஆஸ்துமாவைக் குறைக்க, பொடுகை நீக்க தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என எல்லாவற்றுக்கும் தேனை நாம் பயன்படுத்தலாம்.

தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது. தேனில் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் உண்மை என்னவென்றால் இனிப்பான ருசியோடு, இருமலை குணமாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் கூட்டும் சக்தி தேனுக்கு உண்டு.


தேன் என்பது என்ன?


மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை. தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது. இந்த அற்புதக் கலவை இயற்கையான குணப்படுத்தும் தன்மையை மேலும் அற்புதமாக்கியது. இதிலுள்ள ரகசியக் கூட்டுப் பொருள் வீட்டு வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தேனை அப்படியே சுவைக்கலாம் அல்லது மசாலாக்கள் மற்றும் தண்ணீரோடு கலந்து அதன் அனைத்துப் பயன்களையும் பெறலாம்.


ஊட்டச்சத்துக்கள்----


• சோடியம் 6 மிகி
• புரதம் 15 மிகி
• கார்போஹைட்ரேட் 17கி
• கொழுப்பு 0
• பேந்தோத்தேனிக் அமிலம் 05 மிகி
• ரிப்போபிலேவின் 06 மிகி
• வைட்டமின் சி 1 மிகி
• துத்தநாகம் 03 மிகி
• இரும்பு 05 மிகி
• பொட்டாசியம் 0 மிகி
• கால்சியம் 0 மிகி
• பாஸ்பரஸ் 0 மிகி
• தண்ணீர் 6 கிராம்
• பிரக்டோஸ் 1 கிராம்
• மால்டோஸ் 5 கிராம்
• குளுக்கோஸ் 5 கிராம்


*⚡கொழுப்பு சேராது⚡*


கொழுப்பு உடலில் சேர்வது பயமுறுத்தும் உடல் பிரச்சினை. அதை உடனே சரி செய்ய வேண்டும். பல ஆய்வுகள் தெரிவித்த முடிவின் படி தேன் சாப்பிட்டால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது


ஒரு ஆய்வு தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் 70 கிராம் தேனை உட்கொண்டதில் உடலில் சேர்ந்த கொழுப்பு மூன்று சதவீதம் குறைந்ததை நிரூபிக்கிறது. நீங்களும் இதை முயற்சித்து தேனை தினசரி சேர்த்துக் கொண்டு எளிதில் கொழுப்பைக் குறைக்கலாமே!


நீரிழிவிற்கு தேன் சிகிச்சை


இனிப்பானது தேன், ஆனால் ரத்தத்தில் சர்க்கரை சேராது. இயற்கையின் மகத்தான கொடை மனிதனுக்கு தேனே. நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் பாதுகாப்பானது. உணவிற்கு முன் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் உள்ள C-பெப்டைட் விரதத்தின் போது சீராக இருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன. தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, எனினும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து தேன் எடுத்துக்கொள்ளலாமே! இதுவே பாதுகாப்பானது.


வாய்வுத் தொல்லை-----


இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று வித்தியாசமில்லாமல் வாய்வுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எல்லாவிதமான வயிற்று உபாதைகளுக்கும் ஆண்டிமைக்ரோபயல் மற்றும் ஆக்ஸிஜனேற்றக் கூறுகள் உள்ள தேன் இயற்கையான வழியில் குணப்படுத்த உதவுகிறது. தேனால் சிறந்த பயன் பெற வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பயன்படுத்தலாம். மெத்தில்க்ளைகோஜெல் எனப்படும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ள - தேனை எடுத்துக்கொள்வது விரைவாக வயிற்று உபாதைகளை சரி செய்யும். ஜீரணப் பாதையில் உள்ள நுண்கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் தேனில் உள்ளது.


*⚡நோய்த்தொற்று⚡*

பாக்டீரியா பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. நம் உடலை இத்தகைய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தினசரி உணவில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. தேனில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, மேலும் உடல்நிலை பாதிப்படையாமல் பாக்டீரியாக்களிடமிருந்து உங்களை ஒரு கவசம் போல் பாதுகாக்கும்.


உடற்சக்தி----


தேனில் இனிப்புச் சுவையுடன் மெத்தில்கிளையோக்ஸ்சால் சேர்ந்துள்ளதால் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இந்தச் சேர்க்கை சைட்டோகைன் வளர்ச்சியைத் தூண்டி, உங்களின் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. தேனில் ஆக்ஸிஜனேற்றப் பண்புடன், இத்தகைய நோயெதிர்ப்பு சக்திகளும் சேர்ந்து உங்கள் உடல் சுறுசுறுப்புடனும், நல்ல சக்தியுடனும் செயல் பட உதவுகிறது.


குமட்டல்.....


காலை எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் உணவை சரிவர எடுத்துக் கொள்ள முடியாமல் செய்கிறது. இதனால் உங்கள் உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாகி விடுகிறது. நீங்கள் தேனை சிறிதளவு எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்புகளை விரைவாக மாற்றுகிறது. இந்த சிகிச்சைக்கு எலுமிச்சையுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தேன் குமட்டலை நிறுத்துவதுடன் வாந்தி வராமலும் தடுக்கிறது. எலுமிச்சையின் புளிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகரைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்தலாம்.


எடை இழப்பு-----


இந்த தங்க நிற தேன் நாவில் நீர் ஊரச் செய்யும் வகையில் உங்கள் எடையைக் குறைக்கிறது. மிக விரைவில் எடை குறைய நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். நீங்கள் எடையைக் குறைக்க முயலும் இந்தப் பயணத்தில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உபயோகிக்கும் போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளும் உணர்வை கொடுத்து, எடையையும் குறைக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையை விட வேறுபட்ட வழியில் நம் உடலினுள் செயல்படுவதை தெரிவிக்கிறது.


*⚡தூக்கம்⚡*


தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் தேவை. எனவேதான் உணவு வல்லுனர்களும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தூக்கமும் ஓய்வும் மிகத் தேவை எனப் பரிந்துரைக்கிறார்கள். போதுமான அளவில் தூங்காத போது, அது பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு மேசைக் கரண்டி அளவில் தேனை படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மையைப் போக்கி விடும். இந்த வழியில் கல்லீரலில் உள்ள, ஆற்றலை உருவாக்க மிகவும் அவசியமான கிளைகோஜென் அளவை சீராக்கி, அவை காலியாகாமல் பாதுகாக்கிறது. இந்த செயல்முறை ஆழ்ந்த உறக்கத்தின் போதும் நடை பெற தேன் பெரிதும் உதவுகிறது.


ஆஸ்துமா---


அச்சுறுத்தும் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க தேன் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. தொல்லை தரும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்துவதோடு மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பைப் போக்கி சுவாசத்தை எளிமையாக்குகிறது. மேலும் காற்று செல்லும் வழியில் உள்ள சளிச் சவ்வுகளை மென்மையாக்குகிறது. குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளும் தேன் ஆஸ்துமா அறிகுறியான மூச்சுக்குழாயில் சேரும் சளியை எதிர்த்துப் போராடுகிறது.


பொடுகு---


பொடுகுத் தொல்லை தலையில் நமைச்சலை ஏற்படுத்தி எரிச்சலூட்டும். இங்கே அதற்கான எளிய சிகிச்சையைப் பார்ப்போம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இத்தகைய எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. தேனை உணவில் சேர்த்துக் கொள்வது போலவே, தலையில் தேய்ப்பதும் பாதுகாப்பானது. போடுகினால் பாதிப்படைந்த தலையை குணப்படுத்த தண்ணீரும், தேனும் சம அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி பொடுகு உள்ள இடத்திலும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். தொடர்ந்து செய்யும் போது வித்தியாசத்தை சில வாரங்களில் காணலாம்.


தோலுக்கு தேன்---

பளபளப்பான, கரைகளற்ற முகப் பொலிவிற்கு தேன் ஒன்றே தீர்வாகும். தொடர்ந்து தேனை முகத்தில் தடவும் போது, முகப்பரு, வடுக்கள் போன்ற பலவித தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திக்கும், கிருமி அழிப்பு சக்திக்கும் நன்றி சொல்வோம். சுவை மிகுந்த தேன் வடுக்களை நீக்கி, கரைகளைப் போக்குவதோடு மட்டுமன்றி மீண்டும் மீண்டும் அவை வராமல் தடுக்கிறது. கவலை தரும் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் கோடுகளையும் போக்க இன்றே தேனைத் தடவி நிவாரணம் பெறுங்கள். நிறைய பணம் செலவு செய்து அழகு சாதனங்களை வாங்குவதற்கு முன் ஒரு தேன் குடுவையை வாங்குங்கள். இதுவே முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து மினுமினுக்க வைக்கும்.


✦ தேனின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தேனால் குணமாக்க முடியாத உடல் நலப் பிரச்சனையை காண்பது கடினம். இது ரசாயனங்கள் கலந்த பானங்களுக்கு மாற்றாக பாதுகாப்பான வழியில் அளவற்ற சக்தியையும் ஆரோக்கியமான வழியில் கிடைக்கச் செய்கிறது.

Saturday, 14 July 2018

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?



பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?
A few basic info on real estate.

*பட்டா* ( Patta )

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை
குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா*  ( Chitta )

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல்*  ( Documents of details of the property )

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்* ( Land reserved for living )

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம்*  ( Land reserved for common purposes )

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம்*  ( Land donated for building temples )

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார்*  ( Owner of land who has donated for public use )

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு. ( Land Area )

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது. ( Location limits on all four sides )

ஷரத்து= பிரிவு.( Part )

இலாகா = துறை.( Department )

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
( Sale Deed registration )

*வில்லங்க சான்று* ( Encumbarance Certificate )

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின் விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை = வாரிசுரிமை (succession right )

*தாய்பத்திரம்* (Parent deed)
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்* ( possession right)
நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*( Handing over of the right )
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி = வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் = ( Fertile Land for cultivation )
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் = ( Land depending on rains for cultivation )
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை* (Lease)
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

Tuesday, 10 July 2018

துளசியின் மகிமை ...




துளசியின் மகிமை ...

எந்த இடத்தில துளசி செடி வளர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்கின்றனர். துளசி பெருமாளுக்கு மகாத்மியம் மிக்கது. சத்தியபாமா தன் ஆபரணங்களால் பெருமாளை எடைபோட நினைத்த போது , ருக்மிணி ஒரு துளசி தளத்தால் பெருமாளின் மகிமையை எடுத்துரைத்தாள். துளசியின் இருப்பிடம் மஹாலக்ஷ்மியின் வசிப்பிடம்.

அனுமன் சீதா பிராட்டியைத் தேடி அலைந்த போது ஒரு மாளிகையில் துளசி மாடத்தையும், நிறைய துளசி செடியையும் கண்டு, இங்கு யாரோ ஒரு விஷ்ணு பக்தர் ஆசிக்கிறார் என்று நினைத்து, அங்கு சென்று பார்த்தபோது , அது விபீஷணனின் மாளிகை என்பது தெரிய வந்தது.

சீதா தேவி துளசியை பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ இராமபிரானைத் தன் கணவனாக அடையப்  பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது. எவரது இல்லத்தில் துளசி செடி நிறைய உள்ளனவோ அந்த இடம் புனிதமான திருத்தலம் என்று போற்றலாம். துளசி தளத்தால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து ஆராதிப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது என்று பத்ம புராணம் தெரிவிக்கின்றது.


Thursday, 5 July 2018

நரசிம்மர் வழிபாடு 40 தகவல்கள்





 நரசிம்மர் வழிபாடு 40 தகவல்கள்

1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. ``எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறி உள்ளார்.

23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்மரை வழிபடும் போது ``ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.

"ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் "

Monday, 18 June 2018

குருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு ???








குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.



அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
 ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.

Friday, 15 June 2018

மாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல்கள்...



மாங்காடு காமாட்சி அம்மன் 25 அறிய தகவல்கள்...

1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சிபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி அன்னை முதலில் மாங்காட்டில் தவம் இருந்த பிறகே காஞ்சிபுரத்துக்கு எழுந்தருளினாள் என்று காஞ்சிப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

2. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடுக்குண்டத்தில் தனது இடது காலின் கட்டை விரலின் நுனிப்பகுதி அக்னியில் படுமாறும், வலது காலை இடது காலின் தொடைக்கு மேற் புறமாக இடது கையை நாபிக் கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தனது சிரசிற்கு மேலும், கண்களை மூடிய நிலையில் கடும் தவம் புரிந்தார்.

3. அன்னை பார்வதி தேவி எத்தனையோ தவம் இருந்துள்ளாள். அதில் மிகக் கடுமையான தவமாக மாங்காட்டில் இருந்த தவம் கருதப்படுகிறது.

4. மூலஸ்தானத்தில் அம்பாளாக பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளை தரிசிக்கலாம். இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.

5. ஒருகாலத்தில் மாமரங்கள் நிறைந்து மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு எனும் பெயர் பெற்றது.

6. மாங்காடு தலத்தில் பார்கவர், மார்க்கண்டேயர் ஆகிய மகரிஷிகள் தவம் இருந்து பலன் பெற்றுள்ளனர். கோவில் உள் பிரகாரத்தில் ஆதிசங்கரரின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

7. மாங்காட்டில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு காமாட்சியம்மன் ஆலயத்தை சோழ மன்னர்கள் கட்டினார்கள், அவர்களால் கருவறை, அர்த்த மண்டபம் கட்டப்பட்டது.

8. விஜயநகர பேரரசு மன்னர்கள் இத்தலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். மகா மண்டபம், சபா மண்டபம் அவர்கள் கட்டியது தான்.

9. ஒரு கண் பார்வையிழந்த அசுரகுரு சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

10. இவ்வாலயத்தில் காமிக ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாங்காடுக்கு சூதவதனம், மாலை என்ற பெயர்களும் உண்டு.

11. திருவேற்காடு கருமாரி அம்மன் மற்றும் வேதபுரிஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. பூந்தமல்லிக்கும், குன்றத்தூருக்கும் நடுவில் மாங்காடு உள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநகர பஸ் வசதி உள்ளது.

12. இத்திருக்கோவிலில் “எலுமிச்சம்பழம் கொண்ட ஆறு வார வழிபாடு” பக்தர்களால் பெரிதும் கடைப்பிடிக்கப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

13. கோயிலிலிருந்து சற்றுதூரத்தில், வெள்ளீஸ்வரர் கோயில் உள்ளது. சுக்கிரனின் மற்றொரு பெயர் வெள்ளி. நவக்கிரக கோயிலான கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோயில் போன்று சுக்கிரனுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கோயிலாகும்.

14. காஞ்சிபுரத்தை போல, மாங்காட்டில் காமாட்சிக்கே முக்கியத்துவம் என்பதால், வெள்ளீஸ்வரர் கோயிலில் அம்பாள் இல்லை. அம்பாளின் பாதம் மட்டுமே இருக்கிறது.

15. வெள்ளீஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருக்கிறார். விவசாயிகள் இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை.

16. திருமாலும் தன் தங்கைக்கு திருமணச்சீர் கொண்டு வந்தார். ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

17. மார்க்கண்டேயர் இங்கேயே தங்கும்படி அவரிடம் வேண்டினார். எனவே திருமால், வைகுண்டப் பெருமாளாக இங்கு எழுந்தருளினார். பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு கணையாழி கையில் வைத்திருக்கிறார்.

18. மாங்காடு காமாட்சிக்கும் ஒற்றை மாமரத்துக்கும் தொடர்பு உண்டு. ஆனால் ஏனோ இத்தலத்தில் ஒற்றை மாமரம் இல்லை. மாங்காடு தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

19. இங்கு அர்த்தமேரு ராஜ யந்திரமாகும். இதற்கு கூர்மம்(ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து அதன்மேல் ஸ்ரீ சக்ர யந்திரம் வரையப்பட்டுள்ளது.

20. இத்தலத்து தங்கரதம் 17.5 கிலோ எடை அளவு தங்கத்தால் செய்யப்பட்டதாகும். இது தமிழகத்தில் உயரமான தங்க ரதங்களில் ஒன்றாகும்.

21. சிவபெருமானின் உத்தரவை ஏற்று பார்வதி தேவி, கன்னிப் பெண்ணாக மாங்காட்டில் எழுந்தருளியதால் இத்தலத்தில் கன்னிப்பெண்கள் மனம் உருகி அம்பாளை வழிபட்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

22. இங்கு அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை. இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். இத்தலத்தில் காமாட்சி அம்மன் விளக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

23. இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்ரம் மிகவும் விசேஷமானது. 43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்ரம், "அஷ்டகந்தம்' என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.

24. இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய அர்த்தமேரு சக்கரம், சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் ஆகிய 8 வகையான கந்தங்களைக் கொண்டது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது.

25. சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர். இச்சக்ரத்திற்கு விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

Thursday, 31 May 2018

எலியிடமிருந்து கற்றுக்கொள்ளவோம் ...






எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால்,,அமைதியாக சிந்தித்து செயல்படாததால்  தனது வாழ்க்கையை துறக்கிறான்.

Friday, 11 May 2018

பாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம்




இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ, சுகாய் போர் விமானங்களோ அல்ல. சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி. அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் 'பாபா ஹர்பஜன் சிங்'. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். . 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார்.காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது




.இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.


ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். ஆவியான இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார் ....



courtesy -net 

Tuesday, 20 March 2018

இப்படித்தான் யானையை பழக்குகிறார்கள்...



இப்படித்தான் யானையை பழக்குகிறார்கள்...



'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து  எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை,  பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை,  தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.

சின்ன கொசுறு தகவல்:

யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானை களையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும். (இந்த படத்தில் உள்ள வகை)

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம்  வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.





நன்றி -இணையம்

Saturday, 20 January 2018

பிருந்தாவன அற்புதங்கள்

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்...!!

 அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

🌞 அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோவிலை பற்றி பார்க்கலாம்.

🌞 உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர்.

🌞 இந்த இடம் மகாபாரதத்தில், கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.

🌞 அதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் எனும் கோவில். இந்த கோவிலிலும், இந்த கோவிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

🌞 இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாக காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

🌞 இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

🌞 இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

🌞 மேலும் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.

🌞 ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.

🌞 இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது.

🌞 கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Courtesy_net

Sunday, 7 January 2018

சாம்பார் தமிழ் உணவா மராட்டிய உணவா ?







சாம்பார் தமிழ்  உணவா மராட்டிய உணவா ?

தஞ்சாவூரை மராத்திய மன்னர் ஷாஜி ஆண்டுகொண்டிருந்தார். அவர் சிவாஜியின் உறவு.

அப்பொழுது சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சை விஜயம் செய்தார். அங்கு சாம்பாஜி மாஹாராஷ்டிர உணவான டாலை சாப்பிட ‌விரும்பினார். அதில் ஒரு பிரச்சினை எழுந்தது. மாஹாராஷ்டிர டாலை தயாரிக்க பயன்படும் பதார்த்தங்கள் முக்கியமாக கோகம் என்னும் பழம் தஞ்சையில் கிடைக்கவில்லை.

அதற்கு பதிலாக புளியை உபயோகித்து டாலை தயாரித்தனர். சாம்பாஜி உட்பட எல்லோரும் அதை விரும்பி உண்டனர். அந்த உணவு தஞ்சை அரச குடும்பத்தின் ஆஸ்தான உணவாகவே மாறியது.

சாம்பாஜி ஆகர் (ஆகாரம்/உணவு) என்று அழைக்கபட்டது. நாளடைவில் அந்த பெயர் சுருங்கி சாம்பார் என்று ஆனது. இந்த விஷயம் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள மராட்டிய அரசவை குறிப்புகளில் காணப்படுகின்றது.

இப்பொழுது சொல்லுங்கள் சாம்பார் தமிழா மராட்டியா

Sunday, 26 November 2017

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*


வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்...

Sunday, 29 October 2017

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!




உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

260_கோடி_வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

#ரொம்ப_ரொம்ப_சிறந்த_மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

#தீபதரிசன_மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

#கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

#ஆறுவிரல்_ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

#கண்ணொளி_கீரையும்_உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

#மீனின்_பெயர்_செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

#தங்கமலை_ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

#கிரிவலம்_செய்யும்_முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

#நந்திக்கு_பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

#அண்ணாமலை_பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

#செந்தூர_விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...,


Courtesy-Net

Saturday, 28 October 2017

பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் !!!







பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் !!!

தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

Wednesday, 8 February 2017

ஆத்திசூடி-ஆங்கில மொழிபெயர்ப்பு....



.
ஆத்திசூடி!!!

அவ்வையார்   நமக்கு அருளிய ஆத்திசூடி ....ஒற்றை வரி வைரங்கள்...

அன்றும்,இன்றும்,என்றென்றும் மாறாத சத்திய போதனைகள்....

"We don't understand Tamil" என்று சொல்லும் 

இன்றைய தலைமுறையினருக்காக 

ஆத்திச்சூடியின் ஆங்கில மொழிபெயர்ப்பு....

நல்ல   விஷயங்களுக்கு மொழி தடையாக இருப்பானேன்!!!!



1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்

(courtesy-Net)

Thursday, 2 February 2017

எட்டுக்குள் ஒரு யோகா




எட்டுக்குள் ஒரு யோகா!!!
எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.
இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர் சித்தர்கள்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.
*இதை செய்வதால் என்ன நடக்கும்!*
பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம். இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம். நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை). குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும். கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம். கேட்கும் திறன் அதிகரிக்கும். உடல் சக்தி பெருகும், ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும். குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும். ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும். பாத வலி, மூட்டுவலி மறையும். சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், அந்த வடிவம் *முடிவில்லாதது* மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது. மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்!! உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும், உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும், நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்!! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும்.
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள், ஆண்கள் வலது கை பக்கம் -- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும், ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 15 நிமிடம் நடக்கணும், பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 15 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், மொத்தம் முப்பது நிமிடம்!!
*1வது 21 நாளில* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும்!!!, *2 வது 21 நாளில்* மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்!!!, *3 வது 21 நாளில்* தொடை பகுதி பலம் பெரும்!!!, *4 வது 21 நாளில்* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும்!!!, *5 வது 21 நாளில்* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்!!!, *6 வது 21 நாளில்* இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்!!!


Courtesy -net