badge

Followers

Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Sunday, 15 July 2018

தேனின் பயன்கள்...



தேன்....

கொழுப்பைக் குறைக்க, நீரிழிவை கட்டுக்குள் வைக்க, வாயுத் தொல்லைகளை குறைக்க, தொற்று நோய்களை குணப்படுத்த, சக்தி கொடுக்க, குமட்டலைத் தடுக்க, உடல் எடையைக் கூட்ட, தூக்கமின்மையை போக்க, ஆஸ்துமாவைக் குறைக்க, பொடுகை நீக்க தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என எல்லாவற்றுக்கும் தேனை நாம் பயன்படுத்தலாம்.

தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது. தேனில் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் உண்மை என்னவென்றால் இனிப்பான ருசியோடு, இருமலை குணமாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் கூட்டும் சக்தி தேனுக்கு உண்டு.


தேன் என்பது என்ன?


மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை. தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது. இந்த அற்புதக் கலவை இயற்கையான குணப்படுத்தும் தன்மையை மேலும் அற்புதமாக்கியது. இதிலுள்ள ரகசியக் கூட்டுப் பொருள் வீட்டு வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தேனை அப்படியே சுவைக்கலாம் அல்லது மசாலாக்கள் மற்றும் தண்ணீரோடு கலந்து அதன் அனைத்துப் பயன்களையும் பெறலாம்.


ஊட்டச்சத்துக்கள்----


• சோடியம் 6 மிகி
• புரதம் 15 மிகி
• கார்போஹைட்ரேட் 17கி
• கொழுப்பு 0
• பேந்தோத்தேனிக் அமிலம் 05 மிகி
• ரிப்போபிலேவின் 06 மிகி
• வைட்டமின் சி 1 மிகி
• துத்தநாகம் 03 மிகி
• இரும்பு 05 மிகி
• பொட்டாசியம் 0 மிகி
• கால்சியம் 0 மிகி
• பாஸ்பரஸ் 0 மிகி
• தண்ணீர் 6 கிராம்
• பிரக்டோஸ் 1 கிராம்
• மால்டோஸ் 5 கிராம்
• குளுக்கோஸ் 5 கிராம்


*⚡கொழுப்பு சேராது⚡*


கொழுப்பு உடலில் சேர்வது பயமுறுத்தும் உடல் பிரச்சினை. அதை உடனே சரி செய்ய வேண்டும். பல ஆய்வுகள் தெரிவித்த முடிவின் படி தேன் சாப்பிட்டால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது


ஒரு ஆய்வு தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் 70 கிராம் தேனை உட்கொண்டதில் உடலில் சேர்ந்த கொழுப்பு மூன்று சதவீதம் குறைந்ததை நிரூபிக்கிறது. நீங்களும் இதை முயற்சித்து தேனை தினசரி சேர்த்துக் கொண்டு எளிதில் கொழுப்பைக் குறைக்கலாமே!


நீரிழிவிற்கு தேன் சிகிச்சை


இனிப்பானது தேன், ஆனால் ரத்தத்தில் சர்க்கரை சேராது. இயற்கையின் மகத்தான கொடை மனிதனுக்கு தேனே. நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் பாதுகாப்பானது. உணவிற்கு முன் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் உள்ள C-பெப்டைட் விரதத்தின் போது சீராக இருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன. தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, எனினும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து தேன் எடுத்துக்கொள்ளலாமே! இதுவே பாதுகாப்பானது.


வாய்வுத் தொல்லை-----


இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று வித்தியாசமில்லாமல் வாய்வுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எல்லாவிதமான வயிற்று உபாதைகளுக்கும் ஆண்டிமைக்ரோபயல் மற்றும் ஆக்ஸிஜனேற்றக் கூறுகள் உள்ள தேன் இயற்கையான வழியில் குணப்படுத்த உதவுகிறது. தேனால் சிறந்த பயன் பெற வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பயன்படுத்தலாம். மெத்தில்க்ளைகோஜெல் எனப்படும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ள - தேனை எடுத்துக்கொள்வது விரைவாக வயிற்று உபாதைகளை சரி செய்யும். ஜீரணப் பாதையில் உள்ள நுண்கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் தேனில் உள்ளது.


*⚡நோய்த்தொற்று⚡*

பாக்டீரியா பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. நம் உடலை இத்தகைய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தினசரி உணவில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. தேனில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, மேலும் உடல்நிலை பாதிப்படையாமல் பாக்டீரியாக்களிடமிருந்து உங்களை ஒரு கவசம் போல் பாதுகாக்கும்.


உடற்சக்தி----


தேனில் இனிப்புச் சுவையுடன் மெத்தில்கிளையோக்ஸ்சால் சேர்ந்துள்ளதால் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இந்தச் சேர்க்கை சைட்டோகைன் வளர்ச்சியைத் தூண்டி, உங்களின் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. தேனில் ஆக்ஸிஜனேற்றப் பண்புடன், இத்தகைய நோயெதிர்ப்பு சக்திகளும் சேர்ந்து உங்கள் உடல் சுறுசுறுப்புடனும், நல்ல சக்தியுடனும் செயல் பட உதவுகிறது.


குமட்டல்.....


காலை எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் உணவை சரிவர எடுத்துக் கொள்ள முடியாமல் செய்கிறது. இதனால் உங்கள் உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாகி விடுகிறது. நீங்கள் தேனை சிறிதளவு எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்புகளை விரைவாக மாற்றுகிறது. இந்த சிகிச்சைக்கு எலுமிச்சையுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தேன் குமட்டலை நிறுத்துவதுடன் வாந்தி வராமலும் தடுக்கிறது. எலுமிச்சையின் புளிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகரைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்தலாம்.


எடை இழப்பு-----


இந்த தங்க நிற தேன் நாவில் நீர் ஊரச் செய்யும் வகையில் உங்கள் எடையைக் குறைக்கிறது. மிக விரைவில் எடை குறைய நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். நீங்கள் எடையைக் குறைக்க முயலும் இந்தப் பயணத்தில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உபயோகிக்கும் போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளும் உணர்வை கொடுத்து, எடையையும் குறைக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையை விட வேறுபட்ட வழியில் நம் உடலினுள் செயல்படுவதை தெரிவிக்கிறது.


*⚡தூக்கம்⚡*


தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் தேவை. எனவேதான் உணவு வல்லுனர்களும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தூக்கமும் ஓய்வும் மிகத் தேவை எனப் பரிந்துரைக்கிறார்கள். போதுமான அளவில் தூங்காத போது, அது பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு மேசைக் கரண்டி அளவில் தேனை படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மையைப் போக்கி விடும். இந்த வழியில் கல்லீரலில் உள்ள, ஆற்றலை உருவாக்க மிகவும் அவசியமான கிளைகோஜென் அளவை சீராக்கி, அவை காலியாகாமல் பாதுகாக்கிறது. இந்த செயல்முறை ஆழ்ந்த உறக்கத்தின் போதும் நடை பெற தேன் பெரிதும் உதவுகிறது.


ஆஸ்துமா---


அச்சுறுத்தும் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க தேன் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. தொல்லை தரும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்துவதோடு மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பைப் போக்கி சுவாசத்தை எளிமையாக்குகிறது. மேலும் காற்று செல்லும் வழியில் உள்ள சளிச் சவ்வுகளை மென்மையாக்குகிறது. குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளும் தேன் ஆஸ்துமா அறிகுறியான மூச்சுக்குழாயில் சேரும் சளியை எதிர்த்துப் போராடுகிறது.


பொடுகு---


பொடுகுத் தொல்லை தலையில் நமைச்சலை ஏற்படுத்தி எரிச்சலூட்டும். இங்கே அதற்கான எளிய சிகிச்சையைப் பார்ப்போம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இத்தகைய எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. தேனை உணவில் சேர்த்துக் கொள்வது போலவே, தலையில் தேய்ப்பதும் பாதுகாப்பானது. போடுகினால் பாதிப்படைந்த தலையை குணப்படுத்த தண்ணீரும், தேனும் சம அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி பொடுகு உள்ள இடத்திலும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். தொடர்ந்து செய்யும் போது வித்தியாசத்தை சில வாரங்களில் காணலாம்.


தோலுக்கு தேன்---

பளபளப்பான, கரைகளற்ற முகப் பொலிவிற்கு தேன் ஒன்றே தீர்வாகும். தொடர்ந்து தேனை முகத்தில் தடவும் போது, முகப்பரு, வடுக்கள் போன்ற பலவித தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திக்கும், கிருமி அழிப்பு சக்திக்கும் நன்றி சொல்வோம். சுவை மிகுந்த தேன் வடுக்களை நீக்கி, கரைகளைப் போக்குவதோடு மட்டுமன்றி மீண்டும் மீண்டும் அவை வராமல் தடுக்கிறது. கவலை தரும் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் கோடுகளையும் போக்க இன்றே தேனைத் தடவி நிவாரணம் பெறுங்கள். நிறைய பணம் செலவு செய்து அழகு சாதனங்களை வாங்குவதற்கு முன் ஒரு தேன் குடுவையை வாங்குங்கள். இதுவே முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து மினுமினுக்க வைக்கும்.


✦ தேனின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தேனால் குணமாக்க முடியாத உடல் நலப் பிரச்சனையை காண்பது கடினம். இது ரசாயனங்கள் கலந்த பானங்களுக்கு மாற்றாக பாதுகாப்பான வழியில் அளவற்ற சக்தியையும் ஆரோக்கியமான வழியில் கிடைக்கச் செய்கிறது.

Monday, 2 July 2018

சுத்த நெய் தரும் ஆரோக்கிய பலன்கள்




தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?


காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள்
.
ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.

அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.

சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.

நெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட். ஆகவே இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.

நெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.

பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.

நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு தலைமுடி மென்மை மற்றும் பட்டுப் போன்று ஆவதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பாலில் இருந்து பெறப்படும் நெய்யை சாப்பிட அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நெய்யில் லாக்டோஸ் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.


(courtesy -net )

Wednesday, 27 June 2018

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு




மாரடைப்பு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!

#பகிர்வு#

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, 29 March 2017

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!




உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள்!!!

உடலியக்கம் சீராக நடைபெறுவதற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இரத்தம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும்.

குறிப்பாக இரத்த சோகை ஆண்களை விட பெண்களுக்கு தான் (காரணம் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் சுழற்சி) அதிகம் ஏற்படும். இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டால் நகங்கள் மற்றும் சருமம் வெளுத்துப் போய் இருப்பதோடு, அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.

இரத்த சோகையானது இரும்புச்சத்து குறைபாடு, ஃபோலிக் ஆசிட் குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றால் ஏற்படும். மேலும் இது முற்றினால், நரம்பு பாதிப்பு ஏற்படும். ஆகவே உடலில் உள்ள இரத்தத்தின் அளவை பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கு உடலில் உள்ள இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கருப்பு எள்ளு :-

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உணவின் மேல் தூவி சாப்பிடலாம் அல்லது எள்ளு மிட்டாய் வாங்கியும் சாப்பிடலாம். இதனால் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும்.

பேரிச்சம் பழம் :-

பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் இரவில் 2-3 பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு சாப்பிட்டு வருவது நல்லது.

ஆப்பிள் :-

ஆப்பிளில் கூட இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. அத்தகைய ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை நீங்கும்.

வாழைப்பழம் :-

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இரத்த சோகை மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் கிடைக்கும்.

உலர் திராட்சை :-

உலர் திராட்சையில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பீட்ரூட் :-

பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்த ஊறும் என்று சொல்வார்கள். ஏனெனில் பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்தும் இதில் உள்ளது. எனவே பீட்ரூட்டை வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வெல்லம் :-

வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரைக்கு பதிலாக, டீ போன்ற பானங்களில் வெல்லத்தை சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

தேன் :-

தேனில் இரும்புச்சத்து மற்றும் இதர வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கிறது. உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து கலந்து, குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

நெல்லிக்காய் :-

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடலில் இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும்.

பார்ஸ்லி :-

பார்ஸ்லியில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் வளமையாக நிறைந்துள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் வைட்டமின் சி மற்றும் இதர வைட்டமின்கள் நிறைந்திருப்பதால், இவை இரத்தம் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.

சிட்ரஸ் பழங்கள் :-

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சையில், இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

மாதுளை :-

மாதுளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் மற்ற கனிமச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை குணமாகும்.

தக்காளி :-

தக்காளியில் வைட்டமின் சி மற்றும் லைகோபைன் போன்றவை வளமையாக நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டால் மட்டும் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியாது, இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின் சி நிறைந்த உணவையும் சேர்த்து வந்தால் தான் இரத்தத்தின் அளவு அதிகரிக்க முடியும்.

பச்சை இலைக் காய்கறிகள் :-

பச்சை இலைக் காய்கறிகளான பசலை கீரை, அரைக்கீரை, சிறு கீரை போன்றவற்றை டயட்டில் சேர்த்து வருவதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

Thursday, 2 February 2017

எட்டுக்குள் ஒரு யோகா




எட்டுக்குள் ஒரு யோகா!!!
எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.
இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர் சித்தர்கள்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.
*இதை செய்வதால் என்ன நடக்கும்!*
பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம். இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம். நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை). குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும். கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம். கேட்கும் திறன் அதிகரிக்கும். உடல் சக்தி பெருகும், ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும். குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும். ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும். பாத வலி, மூட்டுவலி மறையும். சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், அந்த வடிவம் *முடிவில்லாதது* மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது. மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்!! உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும், உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும், நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்!! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும்.
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள், ஆண்கள் வலது கை பக்கம் -- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும், ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 15 நிமிடம் நடக்கணும், பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 15 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், மொத்தம் முப்பது நிமிடம்!!
*1வது 21 நாளில* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும்!!!, *2 வது 21 நாளில்* மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்!!!, *3 வது 21 நாளில்* தொடை பகுதி பலம் பெரும்!!!, *4 வது 21 நாளில்* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும்!!!, *5 வது 21 நாளில்* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்!!!, *6 வது 21 நாளில்* இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்!!!


Courtesy -net

Wednesday, 7 December 2016

தயிர் சாதத்தின் அற்புதங்கள்...




தயிர் சாதத்தின் அற்புதங்கள்....
'புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.
நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி.
ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
''இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது

Thursday, 1 December 2016

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் !!!





வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் !!!

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகமாக அவஸ்தைப் படுவது GAS TROUBLE  என்னும் வாயுப் பிரச்சனையில் தான்...

இது ஆளைக் கொல்லாவிட்டாலும் அவஸ்தைப்படுத்தும்....தூக்கத்தைக்கெடுக்கும்....
இந்தப் பிரச்சனைக்கு சில எளிய கைவைத்தியங்கள்...சில பயனுள்ள டிப்ஸ்கள்...

சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .
சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்
கொண்டால் வாயு சேராது.
பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி
குடித்தால் வாயு சேராது .
இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித
வாயுக் கோளாறும் தீரும்.
புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு
வர வாயு அகலும்.
வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்
வாயுவைப் போக்கும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்
தடுத்திட முடியும்,
வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :
காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.
திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்
ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.
ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,
முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்
உண்டான உடல் அசதித் தீரும்.
இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை
அறவே நீங்கும்.
புளியேப்பம் தீர :
இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்
ஆகியவை தீரும்.
சூதக வாய்வுக்கு :
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.
சூலைவாய்வு தீர :
சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு
குணமாகும்.
கபால வாய்வுக்கு :
வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து.....
250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.
வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :
தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்
கலகலப்பாகும்.
வாய்வு ,வயிற்று வலி தீர :
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்
வாய்வு தீர :
வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்
வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு
தொல்லைத் தீரும்.
சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .
சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்
கொண்டால் வாயு சேராது.
பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி
குடித்தால் வாயு சேராது .
இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித
வாயுக் கோளாறும் தீரும்.
புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு
வர வாயு அகலும்.
வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்
வாயுவைப் போக்கும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்
தடுத்திட முடியும்,
வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :
காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.
திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்
ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.
ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,
முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்
உண்டான உடல் அசதித் தீரும்.
இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை
அறவே நீங்கும்.
புளியேப்பம் தீர :
இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்
ஆகியவை தீரும்.
சூதக வாய்வுக்கு :
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.
சூலைவாய்வு தீர :
சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு
குணமாகும்.
கபால வாய்வுக்கு :
வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து.....
250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.
வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :
தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்
கலகலப்பாகும்.
வாய்வு ,வயிற்று வலி தீர :
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்
வாய்வு தீர :
வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்


வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு
தொல்லைத் தீரும்.

Thursday, 24 November 2016

பூண்டு -ஆரோக்கியப் பெட்டகம்




வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ளது .
மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்…
உயர் இரத்த அழுத்தம்,
குறைந்த இரத்த அழுத்தம்,
உயர் கொலஸ்ட்ரால்,
இதய நோய்கள்,
மாரடைப்பு,
பெருந்தமனி தடிப்பு
போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..
மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. 
1 மணிநேரம்:
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரம்:
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரம்:
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்:
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரம்:
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்:
முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவை......
1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.


Tuesday, 22 November 2016

கடுக்காயின் நன்மைகள்






கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்பது பழமொழி

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

Sunday, 6 November 2016

பச்சை தேங்காயின் பயன்கள்




தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ :--
பச்சை தேங்காயின் பயன்கள்.....
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
இரத்தத்தை சுத்தமாக்கும்...
உடலை உரமாக்கும்.....
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்?
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

Friday, 14 October 2016

தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...





தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் 
வெந்நீர் /சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.

அதிலும் வெந்நீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

எடை குறைவு :-
வெந்நீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.

சளி, இருமல் நீங்கும் :-
வெந்நீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-
வெந்நீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் சுத்தமாகும் :-
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும்

முதுமையைத் தடுக்கும் :-
வெந்நீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.

செரிமான பிரச்சனை :-
செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் :-
செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-
சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயுடன் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்.

Thursday, 13 October 2016

செக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்!




நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா! அல்லது தீமை விளைவிக்குமா!! ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?...
உடலில் உள்ள செல்கள்,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் ஹார்மோன் சுரப்பிகள் இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம். தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ரல் கிடையாது .தவிர பல வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .
உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணெய்க்கு நிச்சயம் உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாதுகாக்கும்.
இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகிய வற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக ஆண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னீசிம், செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.இவை தான் எண்ணெயின் உண்மையான குணங்கள் .
ஆனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர்,என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய்யை குறை சொல்ல தொடங்கி விட்டோம்.
சமையல் எண்ணெய் சுத்திகரிக்க படுவதை பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும் பல உள்நாட்டு கம்பனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளை களுக்கு
இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .
இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழ கொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். பிறகு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமில எண்ணெய் நமக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்...
இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது.முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது.அது மட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .
பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான புரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,
குளோபில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .
செக்கில் ஆட்டிய விளக்கெண்ணை எனப்படும் ஆமணக்கு எண்ணெயில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த ஆண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது.ந்தால் தினமும் விளக்கெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய் விடும்.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும்.
"லெக்சீதீன்" என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம்.அதனாலையே இதற்கு"குயின் ஆப் ஆயில் " என்றும் அழைகிறார்கள்.
மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .
வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது
செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .
ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர்.தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் முலம் இயக்கபடுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும் படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம்.
சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான அல்லது கல்லால் ஆன செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .
செக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவ்வளவாக வெப்பம் ஏறாது .இப்படி மர,கல் செக்கில் ஆட்டிப் பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மணமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .
மர,கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.
ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.
ஒரு முறை மர,கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால் ...
அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்

Wednesday, 24 August 2016

நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...



நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...

 தினம் தோறும்  காலைப் பொழுதை சுடச்சுட இட்லியும் ஆரம்பிக்கும் நம்மைப் பொறுத்தவரை இட்லி ஒரு சுத்தமான தமிழக உணவு....

ஆனால் ,ஒரு உண்மை தெரியுமா?

இட்லி போன்ற அரைத்துப்புளிக்க வைத்த  சமையல் முறை,மற்றும் ஆவியில் அவிக்கும் சமையல் முறை  தமிழகத்துக்கு வந்ததே பதிமூன்றாம் நூற்றாண்டில் தான்....

இந்த வகை உணவு இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று சொன்னால் நம்புவது கூடக்கடினம் தான்...

கடல் கடந்து  போர் புரியச்சென்ற சோழ அரசர்கள் கீழை நாடுகளை வென்றபோது அவர்களுக்கு வந்த பொன் ,பொருள் பரிசுகளோடு அந்த நாடு இளவரசியாரும்  மனைவியராக நம் நாடு வந்தனர்...

அந்த இளவரசியரோடு வந்து இந்தோனேசிய சேடிகள் ,அடிமைகள்,சமையல் கலைஞர்களோடு தமிழகம் வந்தது தான்  நம்ம இட்லி....

ஆனால் ,அன்று  அரைத்துப் புளிக்கவைத்த உளுந்து மாவு மட்டுமே வேகவைக்கப்பட்டு உணவானது....நாளடைவில் அத்துடன் நாம் அரிசியையும் சேர்த்து அரைத்து இன்றைய இட்லிக்கு வடிவம் கொடுத்தோம்....

அந்த மாவையே கல்லில் ஊற்றி தோசையாக்கிய வித்தையும் நமக்கு மட்டுமே சொந்தம் அல்ல...

பல மாவட்டங்களிலும்,உலகின் பல நாடுகளிலும் சூடான வழவழப்பான கல்லில்  (ஆம் ...கல்லே தான்.இரும்புக்கல்லா,நான்ஸ்டிக் கல்லோ அல்ல) தான் அரைத்த தானியங்களை  மாவாக்கி சுட்டெடுத்து  உண்டார்கள்...




 நம்ம ஊத்தப்பம் இல்லை /இங்கிலிஷ் பான் கேக் !!!!



மேற்கில் "பான் கேக் " ஆப்பிரிக்காவில்  "இஞ்சேரா ",மகாராஷ்டிரத்தில்  "தாலிபீத் ",ஆந்திராவில்  "பெசரட்டு ",ராஜஸ்தானில் "சில்லா "என்று பல பெயர்களுடன் ,பல வடிவங்களில் நம்ம  தோசை,அடை,ஊத்தப்பம்  வகைகளின் சொந்தங்களை நாம் இன்றும் காணலாம் !

அது சரி ...ஹோட்டலுக்குப் போய்  சூடாக ஒரு மசால் தோசையை ஒரு புடி பிடிக்காதவர்கள்  யாராவது உண்டா?

அந்த மசால் தோசை 1940களில் தான் பிறந்தது என்றால் நம்புவீர்களா?

இந்த மசால் தோசையின் பிறப்பிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரின் ஒரு ஹோட்டல் ஆகும்.(அந்த ஹோட்டல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது)

ஆனால் ஒன்று....அன்றைய மசால் தோசையில் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்க்கப்பட்டது...வெங்காயம் கிடையாது....காரணம்...உடுப்பி  கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள அந்த ஹோட்டலில் ஆச்சாரம் கருதி வெங்காயம் சேர்க்கப்படவில்லை...இன்றும் அங்கே சமையலில் வெங்காயத்திற்கு அனுமதி இல்லை !

இந்த இட்லி,தோசை,சாதம் என்று எல்லாவற்றுடன் நாம் ரசித்து உண்ணும் சாம்பார் கூட நம் ஏக  போக கண்டுபிடிப்பல்ல...

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் படைகளுக்கு உணவளித்த சமையல் காரர் தான்,சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து வீரர்களுக்காக செய்த உணவு ஒன்று தான் அது....

மராட்டியர்கள் சமையலில் kokum  எனப்படும் கொடம்புளியை உபயோகப்படுத்தி சமைப்பார்கள்...
போன இடத்தில நாம் உபயோகப்படுத்தும் புளி தான் கிடைத்தது...அதை கரைத்துத்துவிட்டு ,அதில் கிடைத்த காய்கறிகளையும் சேர்த்து,பருப்பையும் வேக விட்டு ,உப்பு காரம்,வாசனை பொருட்கள்(மசாலா ) சேர்த்து கொதிக்கவைத்து சமையல்காரர் அதை சூடான சாதத்துடன் பரிமாற அது ஒரு சூப்பர் ஹிட்டானது!

உடனே அந்த உணவுக்கு இளவரசர்  சாம்பாஜியின் பெயரை சூட்டினார்!

சாம்பார் பிறந்தது...பிறகு பலவிதமான சாம்பார்கள்  கிளம்பின....ஆனால் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பெயர் மட்டுமே சாம்பார் தான்!




நம் திருமண விழாக்களில் பரிமாறப்படும் பல உணவுவகைகளுக்கும் தான் வீடு மராட்டியம் தான் என்றால் நம்ப முடிகிறதா?

சரபோஜி மன்னர்கள் நமக்கு தஞ்சை பாணி ஓவியங்களை மட்டும் தரவில்லை....

மராட்டிய உணவுவகைகள் பலவற்றயும் நம் பாரம்பரிய உணவாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்...

மராட்டிய இனிப்பான "பூரன்  போலி " தான் நாம் விரும்பி  உண்ணும் போளி ...

"பித்லே " என்று மராட்டியர்கள் செய்யும் குழம்பு வகை தான்
நம் "பிட்டலா /பிட்லை "! இப்போது புரிகிறதா....நம்ம வீட்டில் செய்யும் கத்திரிக்காய்  பிட்லாவின் தாயகம் எது என்று?

ரசவாங்கி,கோசுமல்லி,மோர் குழம்பு, மோதகம் ,போன்ற பல உணவு வகைகள் மஹாராஷ்டிராவில் பிறந்தவை தான்!