badge

Followers

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, 24 August 2016

நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...



நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...

 தினம் தோறும்  காலைப் பொழுதை சுடச்சுட இட்லியும் ஆரம்பிக்கும் நம்மைப் பொறுத்தவரை இட்லி ஒரு சுத்தமான தமிழக உணவு....

ஆனால் ,ஒரு உண்மை தெரியுமா?

இட்லி போன்ற அரைத்துப்புளிக்க வைத்த  சமையல் முறை,மற்றும் ஆவியில் அவிக்கும் சமையல் முறை  தமிழகத்துக்கு வந்ததே பதிமூன்றாம் நூற்றாண்டில் தான்....

இந்த வகை உணவு இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று சொன்னால் நம்புவது கூடக்கடினம் தான்...

கடல் கடந்து  போர் புரியச்சென்ற சோழ அரசர்கள் கீழை நாடுகளை வென்றபோது அவர்களுக்கு வந்த பொன் ,பொருள் பரிசுகளோடு அந்த நாடு இளவரசியாரும்  மனைவியராக நம் நாடு வந்தனர்...

அந்த இளவரசியரோடு வந்து இந்தோனேசிய சேடிகள் ,அடிமைகள்,சமையல் கலைஞர்களோடு தமிழகம் வந்தது தான்  நம்ம இட்லி....

ஆனால் ,அன்று  அரைத்துப் புளிக்கவைத்த உளுந்து மாவு மட்டுமே வேகவைக்கப்பட்டு உணவானது....நாளடைவில் அத்துடன் நாம் அரிசியையும் சேர்த்து அரைத்து இன்றைய இட்லிக்கு வடிவம் கொடுத்தோம்....

அந்த மாவையே கல்லில் ஊற்றி தோசையாக்கிய வித்தையும் நமக்கு மட்டுமே சொந்தம் அல்ல...

பல மாவட்டங்களிலும்,உலகின் பல நாடுகளிலும் சூடான வழவழப்பான கல்லில்  (ஆம் ...கல்லே தான்.இரும்புக்கல்லா,நான்ஸ்டிக் கல்லோ அல்ல) தான் அரைத்த தானியங்களை  மாவாக்கி சுட்டெடுத்து  உண்டார்கள்...




 நம்ம ஊத்தப்பம் இல்லை /இங்கிலிஷ் பான் கேக் !!!!



மேற்கில் "பான் கேக் " ஆப்பிரிக்காவில்  "இஞ்சேரா ",மகாராஷ்டிரத்தில்  "தாலிபீத் ",ஆந்திராவில்  "பெசரட்டு ",ராஜஸ்தானில் "சில்லா "என்று பல பெயர்களுடன் ,பல வடிவங்களில் நம்ம  தோசை,அடை,ஊத்தப்பம்  வகைகளின் சொந்தங்களை நாம் இன்றும் காணலாம் !

அது சரி ...ஹோட்டலுக்குப் போய்  சூடாக ஒரு மசால் தோசையை ஒரு புடி பிடிக்காதவர்கள்  யாராவது உண்டா?

அந்த மசால் தோசை 1940களில் தான் பிறந்தது என்றால் நம்புவீர்களா?

இந்த மசால் தோசையின் பிறப்பிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரின் ஒரு ஹோட்டல் ஆகும்.(அந்த ஹோட்டல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது)

ஆனால் ஒன்று....அன்றைய மசால் தோசையில் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்க்கப்பட்டது...வெங்காயம் கிடையாது....காரணம்...உடுப்பி  கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள அந்த ஹோட்டலில் ஆச்சாரம் கருதி வெங்காயம் சேர்க்கப்படவில்லை...இன்றும் அங்கே சமையலில் வெங்காயத்திற்கு அனுமதி இல்லை !

இந்த இட்லி,தோசை,சாதம் என்று எல்லாவற்றுடன் நாம் ரசித்து உண்ணும் சாம்பார் கூட நம் ஏக  போக கண்டுபிடிப்பல்ல...

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் படைகளுக்கு உணவளித்த சமையல் காரர் தான்,சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து வீரர்களுக்காக செய்த உணவு ஒன்று தான் அது....

மராட்டியர்கள் சமையலில் kokum  எனப்படும் கொடம்புளியை உபயோகப்படுத்தி சமைப்பார்கள்...
போன இடத்தில நாம் உபயோகப்படுத்தும் புளி தான் கிடைத்தது...அதை கரைத்துத்துவிட்டு ,அதில் கிடைத்த காய்கறிகளையும் சேர்த்து,பருப்பையும் வேக விட்டு ,உப்பு காரம்,வாசனை பொருட்கள்(மசாலா ) சேர்த்து கொதிக்கவைத்து சமையல்காரர் அதை சூடான சாதத்துடன் பரிமாற அது ஒரு சூப்பர் ஹிட்டானது!

உடனே அந்த உணவுக்கு இளவரசர்  சாம்பாஜியின் பெயரை சூட்டினார்!

சாம்பார் பிறந்தது...பிறகு பலவிதமான சாம்பார்கள்  கிளம்பின....ஆனால் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பெயர் மட்டுமே சாம்பார் தான்!




நம் திருமண விழாக்களில் பரிமாறப்படும் பல உணவுவகைகளுக்கும் தான் வீடு மராட்டியம் தான் என்றால் நம்ப முடிகிறதா?

சரபோஜி மன்னர்கள் நமக்கு தஞ்சை பாணி ஓவியங்களை மட்டும் தரவில்லை....

மராட்டிய உணவுவகைகள் பலவற்றயும் நம் பாரம்பரிய உணவாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்...

மராட்டிய இனிப்பான "பூரன்  போலி " தான் நாம் விரும்பி  உண்ணும் போளி ...

"பித்லே " என்று மராட்டியர்கள் செய்யும் குழம்பு வகை தான்
நம் "பிட்டலா /பிட்லை "! இப்போது புரிகிறதா....நம்ம வீட்டில் செய்யும் கத்திரிக்காய்  பிட்லாவின் தாயகம் எது என்று?

ரசவாங்கி,கோசுமல்லி,மோர் குழம்பு, மோதகம் ,போன்ற பல உணவு வகைகள் மஹாராஷ்டிராவில் பிறந்தவை தான்!









Friday, 14 August 2015

ப்ரூட் வெஜி நட்டி சாலட்




ப்ரூட் வெஜி  நட்டி சாலட் 

ஜில்லென்ற ,இனிப்பான ப்ரூட் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்...

காரட்,வெள்ளரி  தக்காளி போட்ட வெஜிடபிள் சலட் சாப்பிட்டு இருப்பீர்கள்....

இந்த ப்ரூட் வெஜி  நட்டி சாலட்  ஒரு  முறை செய்து ,சாப்பிட்டு பாருங்களேன்...விடமாடீர்கள்....

சாதாரணமாக,வெஜிடபிள் சாலட் என்றாலே டயட்டில் இருப்பவர்களுக்கான "போர் " டிஷ் என்று பலரும் ஒதுக்கி விடுவார்கள்...

மேலும் சிலர்,"நான் என்ன ஆடா ,மாடா .....எல்லாத்தயும்  பச்சையா திங்கணுமா" என்று கடுப்பாவார்கள்...

குழந்தைகள் சலட் என்றாலே காத தூரம் ஓடுவார்கள்...

இவர்கள் அனைவரையும் மயக்க 
ஒரு சுவையான ,ஆரோகியமான  சாலட் ......

தேவையான பொருட்கள் 
வெள்ளரிக்காய்,காரட் ,குடமிளகாய்,தக்காளி.....(தலா ஒன்று )

ஆப்பிள் -1
பச்சை சீட் லெஸ்  திராட்சை -1 கப் 
பேரிச்சை -2

வறுத்து ,தோல் நீக்கிய கடலை -1/2 கப் 
வெள்ளரி விதை (காய்ந்தது )-1 டீஸ்பூன் 
வறுத்த வெள்ளை எள் -1 டீஸ்பூன் 


பச்சை மிளகாய் - 1-2
எலுமிச்சை சாறு -1 டேபிள் ஸ்பூன் 
 உப்பு -தேவையான அளவு 


செய்முறை 


  • காய்,பழங்களை தண்ணீரில் நன்றாக கழுவவும்.
  • காரட்,வெள்ளரிக்காய் ,அப்பிள்  முதலியவற்றை தோல் சீவவும்.
  • பச்சை மிளகாயை  பொடியாக நறுக்கவும்....(இதற்க்கு  கத்தியை விட கத்திரிக் கோல்  கை கொடுக்கும்.)
  • காய் களை பொடிப் பொடியாக அறியவும்.
  • ஆப்பிள் ,பேரிச்சை முதலியவைகளை பொடியாக அறியவும்.
  • நறுக்கிய பொருட்களுடன் ,எலுமிச்சை சாறு ,உப்பு,கடலை,எள் ,வெள்ளரி விதை,திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இதை ஒரு சூப் பௌல்  நிறைய சாப்பிட்டு வர ஒரு நாளின் காய்/பழ தேவையை கணிசமாக ஈடு செய்யும்...
  • உங்கள் இஷ்டம் போல இதில், சிறிது கோஸ் , கொஞ்சம் முள்ளங்கி,ஒரு உதிர்த்த மாதுளை,அல்லது சிறிது வால் நட் ,கிஸ்மிஸ்  என்று கலந்து மாறுதல் செய்யலாம்.
  • சாதாரணமாக  இதை காலை உணவுடன் சாப்பிடலாம்.மாலை டிப்பன் வேளையில்  முழு ஆகாரமாக உண்ணலாம்.
  • கடலை,எள்ளு முதலியவைகள் சேருவதால் புரதச்சத்து மிகுந்த சாலடும் கூட....
  • மதிய ,இரவு உணவுடனும் பரிமாறலாம்.


  • கூடிய வரை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு சுலபமாக செய்யப்படும் சாலட்  இது....

Monday, 13 July 2015

வெஜிடபுள் கட்லெட்




வெஜிடபுள் கட்லெட் .....

தேவையான பொருட்கள் 


  • உருளைக்கிழங்கு -2-3
  • வெங்காயம்-2
  • காரட் -1
  • பச்சை பட்டாணி -1/2 கப் 
  • ரொட்டி -3 ஸ்லிஸ் 
  • உடைத்த முந்திரி -1 டீஸ்பூன் 
  • சீரகம்-1/2 டீஸ்பூன் 
  • மிளகாய் தூள் -2 டீஸ்பூன் 
  • கரம் மசாலா தூள் -1 டீஸ்பூன் 
  • ரொட்டித்தூள் -தேவையான அளவு 
  • கார்ன் ப்ளோர் (வெள்ளை சோள மாவு)-2 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணை -தேவையான அளவு 
செய்முறை 

  • வெங்காயத்தை பொடியாக அறிந்துகொள்ளவும் .
  • உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும்.
  • அரிந்த காரட் ,பச்சை பட்டாணி ,ஆகியவற்றை வேக வைத்து வடித்துக்கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணையை காய வைத்து அதில் சீரகத்தை பொரிக்கவும்.
  • இதில் அறிந்த வேங்காயத்தை  வதக்கவும்.
  • இதில் வெந்த காய்கறிகள் ,முந்திரி ,மசாலா தூள்,உப்பு,காரம் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
  • இதில் ரொட்டியை சிறிய துண்டுகளாக பிய்த்துப் போட்டு நன்றாக் கிளறி இறக்கி வைக்கவும்.
  • சோள மாவை தண்ணீரில் கொஞ்சம் தளர்வான பதத்தில் கரைக்கவும்.(நீர்த தோசை மாவு பதம்)
  • காய்கறிக் கலவையை வடைகள் போல தட்டிக் கொள்ளவும் .
  • அதை சோள மாவு கரைசலில் முக்கி எடுத்து ரொட்டித் தூளில் புரட்டியெடுத்து சூடான எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

இந்தக்காய் களுடன்  காலி பிளவர் ,பீன்ஸ் ,நூல்கோல் போன்றவைகளும் சேர்க்கலாம் 

Monday, 11 August 2014

வெஜிடபிள் புலாவ்










தேவையான பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி -------------------------2 கப்

தண்ணீர் -----------------------------------4 கப் 
வெங்காயம் ------------------------------2 
பச்சை மிளகாய் ----------------2
பச்சை பட்டாணி ---------------3 டேபிள் ஸ்பூன் 
சிறிய கேரட்----------------------1
பீன்ஸ் ------------------------------4
காலிப்ளவர் ----------------------4-5 துண்டுகள் 
இஞ்சி பூண்டு விழுது -----------1 டீஸ்பூன் 
பட்டை ----------------------------சிறிய துண்டு 
கிராம்பு ----------------------------4
ஏலக்காய் --------------------------2
முந்திரி பருப்பு --------------------சிறிதளவு.
பிரிஞ்சி இலை --------------------1
நெய் --------------------------------4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் -------------------------2 டேபிள் ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு . 
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு 

செய்முறை:- 



  • முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும். 
  • பச்சை மிளகாயை கீறி வைக்கவும் .கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். 

  • ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , பிரிஞ்சி இலை,முந்திரி பருப்பு போட்டு வறுத்து ,அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது  இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப்  தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும் . 
  •                    
  • தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப் ளவர் ,பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.
  • நடுநடுவில் அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.
  • 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென  சுவையான  புலாவ்  பரிமாறத்தயார்.
  • நிதானமாக கீழிருந்து மேலாக சாதத்தை திருப்பிவிட்டு நன்றாக கலந்து பரிமாறவும்.
  • இந்த நெய் சாதத்துடன் எல்லாவிதமான மசாலா கிரேவிகளும், தயிர் பச்சடியும்,சிப்ஸ்ஸும்  நன்றாக பொருந்தும்.

இதே வெஜிடபிள் புலாவை இன்னும் எளிதாக குக்கர்  அல்லது ப்ரெஷர் பான்னில் செய்ய...

  • ப்ரெஷர் பான் அல்லது குக்கரில் நேரடியாக மசாலா பொருட்கள் ,காய் கரி,அரிசி ஆகியவற்றை வதக்கி 4 கப் தண்ணீர் சேர்த்து 3 வ்ஹிச்ட்லே வரும் வரை வேக விட்டால் இன்னும் சுலபமாக இதே புலாவை செய்துவிடலாம்.


Thursday, 6 March 2014

முந்திரிப் பருப்பு பக்கோடா







தேவையான பொருட்கள்




  • கடலை மாவு-1 கப் 
  • அரிசி மாவு-1 கப் 
  • அரிந்த  வெங்காயம் -1 
  • உடைத்த முந்திரிபருப்பு -1 கப் 
  • மிளகாய்த்தூள்-1-2 டீஸ்பூன் 
  • சமையல் சோடா -1/4 டீஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -பொரிக்கதேவையான அளவு 




செய்முறை 
  1. மாவுகளுடன்  சமையல் சோடா,உப்பு ,மிளகாய் தூள் ,சிறிது எண்ணை  சேர்த்து நன்கு பிசறவும்.
  2. இத்துடன் வெங்காயம் ,முந்திரிபருப்பு சேர்த்து பிசறவும்.
  3. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
  4. சூடான எண்ணையில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு வடித்து எடுக்கவும்.

Sunday, 2 March 2014

ரெயின்போ சாலட்

ரெயின்போ சாலட் 







தேவையான  பொருட்கள் 

வெள்ளரிக்காய்  -1-2
தக்காளி -2
காரட் -1
ஊதா நிற கோஸ் -1 துண்டு 
வெங்காயம் -1
பச்சை மிளகாய்-1
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன் 
ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை மிளகு தூள் - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு


செய்முறை 


  • ஊதா  நிற கோசை பொடியாக அறியவும்.
  • வெங்காயம்,தக்காளி,காரட்,வெள்ளரிக்காய் ,பச்சை  மிளகாய்  ஆகியவற்றையும் பொடியாக அறிந்து கல்லவும்.
  • அனைத்தையும்  ஒரு பெரிய பௌல்/பேஸின் இல் போடவும்.
  • இதில் உப்பு ,மிளகு தூள்,எலுமிச்சை சாறு,ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

      # இது ஒரு சத்தான,ஆரோக்யமான பச்சை காய்கறி உணவு .

       #நார்சத்து மிகுந்த ,எடை குறைப்புக்கு உதவக்கூடிய  உணவு.சுவையானதும் கூட!
        
        
       


Monday, 24 February 2014

காரட் கொத்துமல்லி சப்பாத்தி


கொஞ்சம் காரட் ,கொஞ்சம் பச்சை கொத்துமல்லி ,சுறுக் என்ற காரத்துக்கு பச்சைமிளகாய்...
சேர்த்து இந்த சப்பாத்தி செய்து பார்ப்போமா ....








தேவையான பொருட்கள்


கோதுமை மாவு-2 கப்

காரட்-2

கொத்துமல்லி தழை-1 கைப்பிடி

பச்சை மிளகாய் - 3-4

உப்பு - ருசிக்கு தேவையான அளவு

கோதுமை மாவு -1/4 கப்
(மேல் மாவு)

நெய்/எண்ணை  -தேவையான

தண்ணீர் - சிறிது அளவு




செய்முறை


  1. தோல் சீவி நறுக்கிய காரட்,சுட்தபடுத்திய மல்லித்தழை ,பச்சை மிளகாய் ,உப்பு,சேர்த்து மிக்ஸ்ஸியில்  கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம் )
  2. அரைத்த காய் கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக பிசையவும்.சிறிது என்னை/நெய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிகவும் மெதுவாக இருக்கும்.
  3. தேவை பட்டால்  சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.காய்களிலேயே தண்ணீர் பசை இருப்பதால் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  4. 30 நிமிடங்கள் மாவை ஊற வைக்கவும்...






  1. மேல் மாவு தூவி மாவு உருண்டைகளை சப்பாத்திகளாக இடவும்.



சூடான தோசைக்கலில் இரண்டு பக்கங்களும் வேகும் வரை நெய் விட்டு சுட்டு

எடுக்கவும்.,


காரட் டின்  நிறம் இந்த சப்பாத்திக்கு ஒரு நல்ல மஞ்சள் நிறத்தை தரும்.

இந்த சப்பாத்தியில் காய்கள்  இருப்பதால் இதற்க்கு சைடு டிஷ் ஊறுகாய் +தயிர் பச்சிடி போதும்.