வானவில்லின் வண்ணங்களை குழைத்து
யார் இந்த அழகுக்கு காவியங்களின் படபடக்கும்
இறக்கைகளுக்கு பூசியது?
அழகின் அநித்தியத்தை நமக்குப்
புரிய வைக்கத்தான் இந்த அழகோவியங்களுக்கு
இத்தனை குறைந்த ஆயுள் வைத்தானோ அந்தப் படைத்தவன்......
இல்லை...... அற்பப் புழுவிலிருந்து ,கூட்டுக்குள் அடங்கி,போராட்ட்டதுடன் வெளிவருவது தான் பேரழகின் கம்பீரம்.....போராடு சளைக்காதே .... என்று நம்மை சிந்திக்க வைத்து ஊக்கப்படுத்த இவைகள் பிறவி எடுத்தனவோ?