badge

Followers

Showing posts with label youtube. Show all posts
Showing posts with label youtube. Show all posts

Sunday, 1 July 2018

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா....

விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்

யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு, நான்,விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்.

இதன் விளைவாக,அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.

-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Thursday, 14 June 2018

ஓம் சாய்...ஸ்ரீ சாய்...



அன்பு குழந்தையே... உன் வாழ்க்கையில் எத்தனை ஏற்றமும் சறுக்கமும் ,அவற்றில் நீ பெற்றது இழந்தது என ஒரு நாள் பட்டியலிட்டு பார்த்துள்ளாய். அவற்றில் பார் நீ  பெற்றது தான் அதிகம் இருக்கும் நீ இழந்ததை காட்டிலும். ஆனால் நீயே நான் இழந்துவிட்டடேன் என்றே புலம்பிக் கொள்கிறாய். வாழ்க்கையில் உனக்கான எல்லாம் உன்னிடத்தில் வந்து சேர்ந்தன சேர்ந்தது சேரும். முதலில் வாழ்க்கையின்் மகிமையை புரிந்தக் கொள். பிறகு அதனை நன்றியுடன் ரட்சித்து பார் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் தேடி வரும். ஒன்றை சொல்கிறேன் நன்றாக புரிந்துக் கொள் ஒரு பூவை பறிப்பவர்க்கு தான் அதனை எதற்கு பறிக்கிறோம் என்று தெரியும் கப்பலை ஓட்டி செல்வோர்க்கு தான் போகும் பாதையின் புதிரான வழிகள் தெளிவாக விளங்கும். அதை போலவே தான் உன்னை படைத்தவரான எனக்கு தான் தெரியும் உன் நற்பண்புகள் என்ன உனது மனம் எல்லாம். அதனால் புதிரான வழியில் கப்பலோட்டியாய் உன்னை கூட்டி அரவணைத்து செல்வேன். அப்படி என்னுடன் வரும் போது பொங்கி வரும் எல்லாம் நதியின் சங்கமத்தை பார்ப்பது கோடி புண்ணியம் அதனை உனக்கு பார்வைக்கு பாக்கியமளிப்பேன். உனது வாழ்க்கை என் பொறுப்பு. அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. நீ ஜெயமாக நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...   

Thursday, 22 February 2018

அம்மா...ஒரு பார்வை

அம்மாவைப் பற்றி ஓராயிரம் விஷயங்கள் கூறலாம்....

அதில் என் மனதைத் தொட்ட சில...



அம்மா...ஒரு பார்வை...

Thursday, 11 January 2018

ஐயப்பனுக்கு அபிஷேகம் ...காணக் கண் கோடி வேண்டும்....


(காணொளியை  காண படத்தை சொடுக்கவும்)



ஐயப்பனுக்கு அபிஷேகம் ...காணக் கண் கோடி வேண்டும்....

நேரில் சென்றால் கூட இவ்வளவு அற்புதமான  தரிசனம் கிடைப்பது அரிது...

ஸ்வாமியே சரணம்  ஐயப்பா ....


Saturday, 2 December 2017

திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்





திருக்கார்த்திகை  தீபத் 

திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!



உங்கள் இல்லங்களில்,,நெஞ்சங்களிலும்,

இந்தப் பிரபஞ்சம் எங்கிலும் 

தீபா ஒளி பரவட்டும்...

அஞ்ஞானம்,கோபம்,பகை,வறுமை,
நோய் ,வறுமை போர்ன்ற இருள் 
இந்த தீப ஒளியில் மறையட்டும்....

மகிழ்ச்சி  ,சுபிக்ஷம் ,ஆரோக்கியம் ,அன்பு 
எங்கெங்கும் நிறையட்டும்....

Thursday, 30 November 2017

விதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி




விதவிதமாய்  ஜிமிக்கிகள் ...

லோலாக்குகள்...

பெண்களுக்குப் பிடித்தமான 

இந்த வகை காதணிகள் 

புகழின் உச்சத்துக்குச் 

சென்றது என்னமோ 

"எண்டம்மேட  ஜிமிக்கி கம்மல் "
மலையாளப் பாடல் 

வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பரவி \
புகழக் கோடி நாட்டிய பிறகு தானோ....


(படத்தை சொடுக்கி ஸ்லைடு ஷோ வை  பார்க்கவும்...)

Monday, 16 October 2017

ஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ


(விடியோவை பார்க்க படத்தை சொடுக்கவும்)
ஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ 


சின்ன சின்ன  மணிச்சலங்கைகள் கொஞ்சும் 

பாதங்களை தூளியின் வெளியில் நீட்டியபடி 

ஒய்யாரமாய் உறங்கும் உலகலளந்தான் ...கண்ணன்...

அம்மாவின் அணைப்பில் உறங்கும் அழகன்...

அம்மா இடுப்பில் உட்கார்ந்து நிலாச்சோறு உண்ணும் பாலகிருஷ்ணன் ....

வெண்ணை உண்ணும் குறும்புக்கார செல்லக்குட்டி...

காளிங்கன் தலை மீது கால் வைத்து நடனம் இடும்  முகுந்தன்...

கோபியர் கொஞ்சும் ரமணன்...

உலகையே தன மாயக்குழல் இசையாய் 

மயக்கும்  வேணு கோபாலன் .....

கண்ணா....உன்னை எந்த வடிவத்தில் பார்த்தாலும் ஆனந்தமே ....

நினைத்தாலே பரமானந்தம்...



தீபாவளி வாழ்த்துக்கள்....



வலைப்பதிவர்கள் அனைவருக்கும் 
என் மனம் கனிந்த 
இனிய 

தீபாவளி வாழ்த்துக்கள் ...... 

இந்த தீபாவளி திருநாளில் 
உங்கள் இல்லத்தில் 
மகிழ்ச்சியும்,மனநிறைவும்,
ஆரோகியாமும்,ஐஸ்வரியமும் 
நிறையட்டும்....

Sunday, 1 October 2017

ஓம் சாய்ராம்









ஓம் சாய்ராம் என்று நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் உங்களுடை நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமே இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்க்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன்.





--ஷிர்டி சாய்பாபா

Thursday, 23 March 2017

வித்யாசமான பிள்ளையார்கள் - ஒரு ஸ்லைடு ஷோ



வித்யாசமான பிள்ளையார்கள் .... 
ஒரு ஸ்லைடு ஷோ

(படத்தை சொடுக்கி ஸ்லிட் ஷோவை காணவும் )

முழு முதல் கடவுளான விநாயகர்
ஒரு குழந்தை போல...
சிநேகிதர் போன்றவர்....
அதனால் தானோ என்னவோ
அவரை மஞ்சள்,களிமண் ,ஏன் ....சாணத்தில் கூட
பிடித்து வைத்து  சாதாரண அருகம் புல்லாலும் ,
எருக்கம் பூவாலும் அர்ச்சித்து வழிபட்டு  வருகிறோம்...
அது மட்டும் அல்ல...
அவரை மட்டுமே பல பல வடிவங்கள் கொடுத்து கொண்டாடுகிறோம்...

ஹாயாக  திண்டில் சாய்ந்து படுத்துக்கொண்ட பிள்ளையார்...
மூஞ்சூர் வரையும் ஓவியத்துக்கு மாடல் செய்யும் கணநாதர்...
பட்டம் விடும் பிள்ளையார்....
கனக்குப் பிள்ளை பிள்ளையார்...
பெட்டியுடன் பயணம் செல்லும் லம்போதரர்...
வீணையின் நாதமாய் இருக்கும் கணேசர்...
பிறை நிலவில் அமர்ந்தவர்...
மூஞ்சூருக்கு வைத்தியர்...
வாத்தியங்கள் இசைப்பவர்...
ஸ்கூட்டரில் பார்ப்பவர்...
லேப் டாப் இல் வேலை செய்பவர்...
இப்படி பக்தரின் இஷ்டப்படி
அவதாரம் செயது அனைவரையும் மகிழ்வித்து அருளுபவர்
இந்த விநாயகர்...
விநாயக சதுர்த்தியின் போது
அவர் எடுக்கும் பல பல நவீன அவதாரங்களில்
ஒரு சிலவற்றின் தொகுப்பே என்னுடைய
இந்த சிறு ஸ்லிட் ஷோ ...

Thursday, 23 February 2017

சம்போ மஹா தேவ தேவா!!!!-ஒரு சிறு ஸ்லைடு ஷோ....


சம்போ மஹா தேவ தேவா !!!!!!
என்ற அப்பைய தீக்ஷிதர் எழுதிய மார்கபந்து ஸ்தோத்ரம்  இனிமையாக பின்னணியில் ஒலிக்க  ஒரு சிறு ஸ்லைடு ஷோ....
**********************************
சர்வம் சிவம்
அஹம் சிவம்
எங்கும் திருமேனி
எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம்
எங்கும் திருநட்டம்
சிவம் உருவமற்றது
சிவம் புலன் கடந்தும்
சிவம் சித்தம் கடந்தும்
சிவம் தூய அறிவாகவும்
சிவம் விளக்கமுடியாத
சிவம் உபதேசிக்க இயலாத
சிவம் காலம்கடந்தும்
சிவம் தேசம் கடந்தும்
சிவம் சமயம் கடந்தும்
சிவம் இரண்டற்றதும்
சிவம் அனாதியாகவும்
சிவம் எவ்விடத்திலும்
சிவம் எல்லாவற்றிலும்
சிவம் உயிர்களிலும்
சிவம் அணுவுக்குள் அணுவாயும்
சிவம் உயிரற்றவையிலும்
சிவம் அனைத்திலும்
சிவம் நீக்கமற நிறைந்த
சிவமே பரம்பொருள்
சிவமே நீ! சிவமே நான்!!
சிவமே சர்வம் என உணர
சிவவழிபாடு என்பது
சிவ வடிவான உயிர்களுக்கு
சீவசேவையே சிவசேவை!!!

Thursday, 16 February 2017

ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....



ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
(ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும் )




பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார்.
 பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும். 
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார். 

Wednesday, 8 February 2017

மாணிக்கம் கட்டி .....வைரம் இடைகட்டி-ஒரு சிறு ஸ்லைடு ஷோ





"மாணிக்கம் கட்டி .....வைரம் இடைகட்டி ...
ஆணிப்பொன்னால் செய்த 
வண்ணச்சிறு  தொட்டில் ..."


என்ற 4000 திவ்யப்ரபந்தத்துடன் 
சின்னஞ்சிறு கண்ணன்...அந்த உலகளந்தவனை...
யசோதை தாலாட்டும் இனிமையான பாடலுடன் 
கூடிய ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...

(பாடலை கேட்கவும் படத்தொகுப்பை பார்க்கவும் 
மேலே உள்ள படத்தை சொடுக்கவும் ...)

Monday, 6 February 2017

லட்சுமி வருவாய் என் மனையினிலே-ஒரு ஸ்லைடுஷோ




லட்சுமி  வருவாய் என் மனையினிலே .....

வரலக்ஷ்மி விரதத்தன்று 

ஸ்ரீ வரலட்சுமியை 

"பாக்யாத லட்சுமி பாரம்மா..."

என்று கன்னடத்திலும்,

"லட்சுமி  ....ராவே மா இன்டிகி ..."

என்று தெலுங்கிலும் பாடி அழைப்பது  வழக்கம்....

அதே பாடல் அழகுத் தமிழில் ......

"லட்சுமி ...வருவாய் என் மனையிலிலே....."

 மகாநதி  ஷோபனாவின் பாடலுடன் என் 

சிறிய ஸ்லைட்ஷோ இதோ.....

Friday, 3 February 2017

ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ


ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ 



ஸ்ரீ ஷீர்டி சாய் நாதருக்கு 

அபிஷேகம் ....

கண்களுக்கு,மனதிற்கும் 

நிறைவு தரும் ஒரு சிறிய வீடியோ ....

காணொளியைக்காண படத்தை சொடுக்கவும்...

Friday, 27 January 2017

சாய் லீலை .. சிறிய ஸ்லைடு ஷோ






"ஓம் நமோ பகவதே சாயி நாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய 
சகல லோக பூஜீதாய


சர்வ தோஷ நிவாரணாயா

ஷீரடி வாசாய

சாயி நாதாயதே நமஹ....."

Thursday, 26 January 2017

பனித்துளி-ஒரு சிறிய ஸ்லைடுஷோ


 பனித்துளி -ஒரு சிறிய ஸ்லைடுஷோ....


வண்ண மலர்களின் மெல்லிதழ் மேல் மின்னும் வைரமாய்....

புல் நுனியில் காலை கதிரொளியில் ஜொலிக்கும் பாதரச மணியாய்....

பச்சை இலையில் தெறித்த மின்னும் முத்துக்களாய் ....

சிலந்தி வலையில் கோர்த்த வைர மாலையாய்....

நீ பட்ட  இடத்திலெல்லாம்  அழகுக்கு அழகு சேர்க்கிறாயே....

விலை மதிப்பில்லா பனித்துளியே......

Monday, 23 January 2017

ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்...ஷீர்டி சாய்...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ





ஷீர்டி சாய் பாபா ....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
ஸ்லைடு ஷோவை பார்க்க  படத்தை சொடுக்கவும்....


ஷிர்டி சாயிபாபா அளித்த பதினோரு உபதேச மொழிகள்:


1. ஷிர்டி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ. அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.
2. துவாரகாமாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சாந்தோஷத்தை அடைவார்கள்,
3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.
4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அனேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கும்.
5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.
6. என்னுடைய மசூதியில் இருந்துகொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.
7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாக்க்ஷிக்கிறேன்.
9. நீ என்பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவற்றை உடனே நான் உனக்குக் கொடுப்பேன்.
11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது....

Saturday, 14 January 2017

ஸ்வாமியே சரணம் ஐயப்பா .....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....




ஸ்வாமியே சரணம் ஐயப்பா .....ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....

மகர ஜோதி வானில் தெரியும் இவ்வேளையில் 

சபரிமலை ஸ்ரீ ஐயப்பனைப் பற்றி இந்த 
சிறு விடியோவை தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பின்னணியில் உள்ள பாடலை மறக்காமல் ரசியுங்கள்....

மேலும் விடீயோக்களை காண YOUTUBE CHANNELஐ 

பாருங்கள்...விருப்பப்பட்டால் subscribe  செய்யுங்கள்...

Friday, 13 January 2017

வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள்...ஒரு சிறிய வீடியோ




வானவில்லின் வண்ணங்களை குழைத்து 
யார் இந்த அழகுக்கு காவியங்களின் படபடக்கும் 
இறக்கைகளுக்கு  பூசியது?


அழகின் அநித்தியத்தை நமக்குப் 
புரிய வைக்கத்தான் இந்த அழகோவியங்களுக்கு 
இத்தனை  குறைந்த ஆயுள் வைத்தானோ அந்தப் படைத்தவன்......

இல்லை...... அற்பப் புழுவிலிருந்து ,கூட்டுக்குள் அடங்கி,போராட்ட்டதுடன் வெளிவருவது தான்  பேரழகின் கம்பீரம்.....போராடு  சளைக்காதே .... என்று நம்மை சிந்திக்க வைத்து ஊக்கப்படுத்த இவைகள் பிறவி எடுத்தனவோ?