Followers
Showing posts with label ஷீர்டி சாய் பாபா. Show all posts
Showing posts with label ஷீர்டி சாய் பாபா. Show all posts
Thursday, 5 July 2018
Thursday, 16 March 2017
சீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள்
ஸ்தல வரலாறு :
மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.
அங்குள்ள `கண்டோபா' என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
அதிசய வேம்பு :
பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அற்புத கல் :
பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.
இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதிசய நந்தா தீபம் :
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
உண்டியல் காணிக்கை :
கோவிலுக்கு வருபவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துகிறார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுப்பது போல், இங்கு வரும் பக்தர்களும் பாபாவிற்கு காணிக்கையை அள்ளித் தருகிறார்கள். வாரம் தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் இங்குள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் 2 கோடி ரூபாய்க்கும் ரொக்கப் பணம் மட்டும் காணிக்கையாக கிடைக்கிறது.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்... என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.
பக்தர்களுக்கான சிறப்பு வசதிகள் :
குவியும் பக்தர்கள் :
இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு தினமும் 50 ஆயிரம் பேர் வருகை தருவதாகவும், விசேஷ நாட்களில் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) அவர்களது எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதாகவும் சீரடி திருத்தலம் பற்றிய ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தங்கும் அறைகள் :
இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1,500 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு :
வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுண்டர்களும் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.
மிகப்பெரிய உணவுக்கூடம் :
திரண்டு வரும் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம். இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு 10 ருபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு, சாதம், சப் பாத்தி, பூரி 2 வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு வழங்கப்படுகிறது.
Thursday, 2 March 2017
சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...
கவலைகள் விலகும்...
சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போன்று ஸ்ரீ சாய் பாபாவே அவரின் ஆதீனத்திற்கு உங்களை இழுத்து கொண்டார். உடலாலும் வாக்காலும் மனதாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும், பணிவுடனும், பாபாவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்..இவ்வாறு பாபாவிடம் சரணடைந்த பிறகு எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுடைய கவலைகள் விலகும்...
சாயி ஸ்த்சரித்திரம்
Thursday, 16 February 2017
ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
(ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும் )
பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார்.
பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும்.
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார்.
Friday, 3 February 2017
ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ
ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ
ஸ்ரீ ஷீர்டி சாய் நாதருக்கு
அபிஷேகம் ....
கண்களுக்கு,மனதிற்கும்
நிறைவு தரும் ஒரு சிறிய வீடியோ ....
காணொளியைக்காண படத்தை சொடுக்கவும்...
Friday, 27 January 2017
சாய் லீலை .. சிறிய ஸ்லைடு ஷோ
"ஓம் நமோ பகவதே சாயி நாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜீதாய
சர்வ தோஷ நிவாரணாயா
ஷீரடி வாசாய
சாயி நாதாயதே நமஹ....."
Tuesday, 17 January 2017
சாயியின் அமிர்த வார்த்தைகள் ....
1. என்னை நேசிப்பவரின் பார்வையில் நான் மட்டுமே தெரிவேன்.
2. அவருடைய வாயில் என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.
3. அவர் என்னையே அகண்டமாகத் தியானம் செய்வார்.
4. நாக்கு என் நாமத்தையே ஜெபம் செய்யும்.
5. என் சரித்திரத்தையே பாடிக் கொண்டிருப்பர்.
6. என்னிடம் சேர்ந்தவரின் கடனை தலையில் ஏற்று அவரை கைதூக்கி விடுவதன் மூலம் அக்கடனை திருப்பிச் செலுத்துகிறேன்.
Friday, 23 December 2016
ஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...
ஓம் சாய் நமஹா .....
ஜெய் சாய் ராம் ...
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...
ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...
Thursday, 15 December 2016
சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்
சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான் ....
இதோ ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
என் YouTube Channel இல் இருந்து...
Sunday, 11 December 2016
ஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....
ஓம் சாய் நமஹா .....
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....
சதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான
வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும்.
சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும்
நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா
தனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம்
இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா
சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே
பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக்
கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது
வாக்குறுதி.
-சாய் ராம் -
Friday, 9 December 2016
ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...
ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ......
எங்கே உண்மையான ஆர்வமும் , ஏக்கமும்
இருக்கின்றதோ, பாபா தம்மைத்தாமே
அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்
- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, 6 December 2016
ஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
இதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய
ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
யூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...
YouTube ...
" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும்,
காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும்,
வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும்
எங்கும் இருக்கிறேன்.
நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும்
உட்பட்டவன் அல்லன்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."
Monday, 5 December 2016
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா- ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
உன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்?
என் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். "நானிருக்க பயமேன்" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.
Wednesday, 30 November 2016
ஓம் ஸ்ரீ சாய் ராம் ...
ஓம் ஸ்ரீ சாய் ராம் ...
உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்
நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன்.
இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்.
இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்.
-ஸ்ரீ சாயியின் குரல்-
Thursday, 24 November 2016
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா ...ஒரு சிறிய யூ ட்யூப் தொகுப்பு....
ஒரு சிறிய யூ ட்யூப் தொகுப்பு....
ஜெய் ஸ்ரீ சாய் ராம் ....
Wednesday, 23 November 2016
ஓம் ஸாயீ நமோ நமஹா ...
ஓம் ஸாயீ நமோ நமஹா ...
ஸ்ரீ ஸாயீ நமோ நமஹா ...
ஸத்குரு ஸாயீ நமோ நமஹா ...
ஷீர்டி ஸாயீ நமோ நமஹா ......
Monday, 21 November 2016
சத்குரு ஷிர்டி சாய்பாபா.....
இதோ....ஸ்ரீ ஷீர்டிசாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடுஷோ......
உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்...
நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன்.
---சத்குரு ஷிர்டி சாய்பாபா
Saturday, 19 November 2016
ஸ்ரீ சாய் நாதாய நமஹா ....
ஸ்ரீ சாய் நாதாய நமஹா ....
ஷீர்டி சாய்பாபா படங்களின் கோவையை ஒரு சிறிய யு ட்யூப் ஸ்லைடு ஷோவாக தொகுத்து சமர்ப்பித்து உள்ளேன்....
இதுவே என் முதல் முயற்சி...
தங்கள் மேலான கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...நன்றி....
Thursday, 17 November 2016
ஸ்ரீ ஷீரடி சாய் பாபா.... (4)
உன் வீட்டிற்கு வருகிறேன்...
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்.
Wednesday, 2 November 2016
Subscribe to:
Posts (Atom)


























































