badge

Followers

Showing posts with label ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. Show all posts

Saturday, 11 August 2018

சாய் இருக்க நமக்கு ஏன் கவலை...




பாபா நீ
என்னுடன்
இருப்பதால்தான்
கவலை இல்லாமல்
இருக்கிறேன்

நமது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், நம் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படவேண்டாம்.

அவர்கள் நம் கர்மாக்களை, நமது பாவங்களை உண்டும், அனுபவித்தும் நம்மை விடுதலை செய்கிறார்கள்.

சாய் இருக்க நமக்கு ஏன் கவலை.


Sunday, 1 July 2018

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா....

விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்

யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு, நான்,விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்.

இதன் விளைவாக,அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.

-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Thursday, 14 June 2018

ஓம் சாய்...ஸ்ரீ சாய்...



அன்பு குழந்தையே... உன் வாழ்க்கையில் எத்தனை ஏற்றமும் சறுக்கமும் ,அவற்றில் நீ பெற்றது இழந்தது என ஒரு நாள் பட்டியலிட்டு பார்த்துள்ளாய். அவற்றில் பார் நீ  பெற்றது தான் அதிகம் இருக்கும் நீ இழந்ததை காட்டிலும். ஆனால் நீயே நான் இழந்துவிட்டடேன் என்றே புலம்பிக் கொள்கிறாய். வாழ்க்கையில் உனக்கான எல்லாம் உன்னிடத்தில் வந்து சேர்ந்தன சேர்ந்தது சேரும். முதலில் வாழ்க்கையின்் மகிமையை புரிந்தக் கொள். பிறகு அதனை நன்றியுடன் ரட்சித்து பார் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் தேடி வரும். ஒன்றை சொல்கிறேன் நன்றாக புரிந்துக் கொள் ஒரு பூவை பறிப்பவர்க்கு தான் அதனை எதற்கு பறிக்கிறோம் என்று தெரியும் கப்பலை ஓட்டி செல்வோர்க்கு தான் போகும் பாதையின் புதிரான வழிகள் தெளிவாக விளங்கும். அதை போலவே தான் உன்னை படைத்தவரான எனக்கு தான் தெரியும் உன் நற்பண்புகள் என்ன உனது மனம் எல்லாம். அதனால் புதிரான வழியில் கப்பலோட்டியாய் உன்னை கூட்டி அரவணைத்து செல்வேன். அப்படி என்னுடன் வரும் போது பொங்கி வரும் எல்லாம் நதியின் சங்கமத்தை பார்ப்பது கோடி புண்ணியம் அதனை உனக்கு பார்வைக்கு பாக்கியமளிப்பேன். உனது வாழ்க்கை என் பொறுப்பு. அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. நீ ஜெயமாக நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...   

Saturday, 10 February 2018

ஶ்ரீ ஷீரடி சாய் பாபா அருள் வாக்கு...

 குழந்தாய் நீ பட்ட கஷ்டங்கள் மறையும்நேரம்  நெருங்கி விட்டது.நீ ஓடி ஒளிந்தது போதும் .நிம்மதி இல்லாமல்
பசி இல்லாமல்,தூக்கம் இல்லாமல்,அவதிபட்டது போதும்
இனி உன் கண்ணீர் வீனாக கூடாது.நான் உன் அருகில் இருந்து உன்னை கண்காணித்து உன் கர்மவினைகள் போக்கி உனக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறேன்.இனி வரும் காலம் இனிதாகும்.

                                        -  ஷீரடி சாய்பாபா




Wednesday, 17 January 2018

ஷீர்டி சாய் பாபா....சரணம்...


நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
சந்தோஷம் இல்லாத இடத்தில் யாருக்கும் நிம்மதி இருக்காது.
பக்தி இல்லாத இடத்தில் சத்தியம் இருக்காது.
 தியாகமனப்பான்மை இல்லாத இடத்தில் நிச்சயமாக அன்பும் இருக்காது.
அஹங்காரம் என்ற வலையில் சிக்காதவர்கள்,ஆண்டவனுடைய அரவணைப்பில் இருக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.






Tuesday, 7 November 2017

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....



  தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார். 
அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார். 
பாபாவை நேசிக்கும் ஒருவன், உண்மையில் அவரிடம் எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.
 எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.








Friday, 3 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா....








 பாபாவிடம்  ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார்.

 நீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.

 பாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள். 

வியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா  நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே.

 பாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். 

-ஓம் சாய்ராம்.



Wednesday, 1 November 2017

ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...






தைரியமாய் இரு -
நானே சுமக்கிறேன்.....
கர்மங்களை
குறைத்துக்கொள்ள வழி,
அதை தைரியமாக
அனுபவிப்பதே...

நீங்கள் எப்போதும்
என்னை
நினைத்துக்கொண்டிருந்தால்
என்பால்
நம்பிக்கைக் கொண்டிருந்தால்
அதை அனுபவிக்கும்
சக்தியை
நான் கொடுக்கிறேன்.
அது துன்பம் என்ற
எண்ணம் உங்களில்
ஏற்படாமல்
நான் செய்கிறேன்.
உன்னில் இருக்கும்
நானே அதை சுமக்கிறேன்.

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா