badge

Followers

Showing posts with label ganapathi. Show all posts
Showing posts with label ganapathi. Show all posts

Friday, 25 December 2015

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே.....


இதோ ஒரு புதிய கேரளா ம்யூரல் ஓவியம் ....




அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
ஊர்தோறும் தெருவெல்லாம் வீற்றிருப்பவன்
தினம் உழைப்போர் தம் குறைகளையே மாற்றிவைப்பவன்
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
பார் முழுதும் பலவடிவம் ஏற்றிருப்பவன்
ஆழிப் பை நாக பள்ளியானின் மூத்த மருமகன்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
அன்னை தந்தைதான் நமக்கு உலகம் என்றவன்
மந்திர ஆசார நியமங்களின் அப்பாற்பட்டவன்
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
என்ன வைத்து கும்பிட்டாலும் ஏற்றுக்கொள்பவன்
அரளி அருகம் புல்லில் எழுந்து நிற்ப்பவன்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
கள்ளமில்லா உள்ளத்தோடு வாழ்ந்திருப்போமே
மூன்று காலாத்தையும் ஆள்பவனை சார்ந்திருப்போமே
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே
அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே


(பாடல் வரிகள்...நன்றி இணையம் )

Saturday, 19 July 2014

கணபதி மடியில் கிருஷ்ணர்...என் தஞ்சை ஓவியம்...




குழந்தைக்கிருஷ்ணனை  ஆசையுடன் மடியில் 

அமர்த்தி கொஞ்சும் இந்த வித்தியாசமான கணபதி

நமக்கு தரிசனம் தருவது கேரள மாநிலத்தில்,

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள 

ஸ்ரீ மல்லியூர் கணபதி கோவில்

 என்கிற திருத்தலத்தில்... 



பிள்ளையாரை எத்தனையோ வடிவங்களில் 

நாம் வடிவமைத்து வணங்கி மகிழ்கிறோம்...

கிரிகெட் ஆடும் பிள்ளையார்...

கம்ப்யூட்டர் பிள்ளையார்...

வாத்தியங்கள் வாசிக்கும் பிள்ளையார்...

படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் கணேசர்...

என்று இன்று எண்ணற்ற வடிவங்களில் 

நாம் கணநாதரை கொண்டாடுகிறோம்...



ஆனால்,பல நூறு ஆண்டுகளுக்கு முன் 

கட்டப்பட்ட இந்தத் திருத்தலத்தில் 

மாமன் கிருஷ்ணனை வாஞ்சையோடு 

தன் மடி மீது அமர வைத்துக் கொஞ்சும் 

அன்பான மருமகனாக கணபதி காட்சி தருகிறார்...



இவர்களை தஞ்சாவூர் பாணி ஓவியமாக வடித்து 

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...



Sunday, 15 June 2014

ஓய்வெடுக்கும் விநாயகர் -என் தஞ்சை பாணி ஓவியம்






பல பல வடிவங்களில் விநாயகரை ஓவியமாக 

(குறிப்பாக தஞ்சை பாணி ஓவியமாக)

வரைந்திருந்தாலும் ,இந்தப்  பிள்ளையார் என் 

மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்....


பொன் வேய்ந்த மண்டபத்தில் அமரவில்லை....

நவரத்தினங்கள் பதித்த பீடத்தில் அமரவில்லை...

ஏன் ,அபயஹஸ்தம்  கூட காட்டி  பக்தருக்கு 

அருளவில்லை...


ஆனால்,உங்களைபோல் ...என்னைப்போல்....

ஹாயாக மஞ்சத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு 

மனதுக்குப் பிடித்த புத்தகத்தை நிம்மதியாகப் 

படித்துக் கொண்டு "ரிலாக்ஸ் " செய்தபடி 

ஓய்வெடுக்கிறார்  இந்த கஜானனர்....


அல்லும் பகலும் அயராது பக்தகோடிகளை 

காத்து,துயர் துடைக்கும் இவர் நம்மைப் போல 

கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த படி 

ஓய்வெடுப்பதற்கும்  நேரம் ஒதுக்குகிறார் 

என்று நினைத்துப் பார்பதே அவருடன் நம்மை 

இன்னும் நெருக்கமாக்குகிறதோ?


Monday, 3 March 2014

பிள்ளையார் -ஒரு வித்தியாசமான ம்யூரல்












அளவாக வெட்டப்பட்ட 

மரத்துண்டின் மீது 

சிறிய கற்கள்  பாங்காக ஒட்டி 

எம் சீல் (mseal ) கொண்டு 

சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற 

வடிவங்கள்  செய்து 

பொருத்தி காயவிட்டு,

எம் சீலால்  வடிவமைத்த 

பிள்ளையாரின்  முகம்,
காது,கிரீடம் ,தந்தம் 

ஆகியவைகளை  செய்து 

ம் யூரல்லை  முழுமையாக்க 

ஆணைமுகத்தனின் தும்பிக்கையில் 

ஒரு சிறு மலரை  பொருத்தி 

வைத்தேன்....

தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள் 

பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )

மெருகு சேர்த்து சுவற்றில் 

மாட்டி  அறைக்கு  அழகு சேர்த்தேன்...



நீங்களும்  செய்து பாருங்களேன்....

Friday, 13 July 2012

ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்






மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: 
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 


Friday, 6 July 2012

நர்த்தன கணபதி-கேரளா ம்யுரல்


                                                           விநாயகர் அகவல்
                                                          ---------------------------



சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும்  
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரியமெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் 
பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென 
வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து 

தலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழ பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
 உடற்சக் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்ஷமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றான் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற்  கொன்றிட மென்ன 
அருள் தரும் ஆனந்த மளித்து என்செவியில் 

எல்லை இல்லா ஆனந்தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச் 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக விரைகழல் சரணே
                                                                                      -ஒளவையார்


(நன்றி--இணையம்)




தொந்தி குலுங்க செந்தாமரை மீது நடனம் இடும் இந்த ஆனந்த கணபதி,

கேரளா (kerala mural ) பாணியில் நான் வரைந்த .ஓவியம்...

இவ்வகை mural  ஓவியங்களை சாதாரணமாக

கேரள  கோவில் சுவர்களின் .காணலாம்...

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை சுவர் சித்திரங்கள்

இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டன....

இலை ,,பூக்கள்,,,மண் ,,கால்,கரி,கிளிஞ்சல் சுண்ணாம்பு

  போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்ட

ஐந்து வர்ணங்களால் மட்டுமே இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டன....

மஞ்சள்சிவப்பு,பச்சை,நீளம்,பழுப்பு ,+(கருப்பு ,வெள்ளை )ஆகிய நிறங்கள்

மட்டுமே இந்த ஓவியங்களில் உபயோக படுத்தப்படுகின்றன...

இன்று ,இவ்வகை ஓவியங்களை கான்வாஸ்ஸில்  acrylic colors

  உபயோகப்படுத்தி இந்த கணபதியை வரைந்தேன்....





Saturday, 16 June 2012

பஞ்ச முக கணபதி ...



இந்த பஞ்ச முக கணபதி தஞ்சை பாணி ஓவியமாக கண்ணாடியில் தீட்டப்பட்டது...

செய்முறை...

டிசைன் ஐ reverse செய்து கண்ணாடியின் பின் பக்கம் இந்தியன் இன்க்கால் வரைந்து கொள்ளவும்...
பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஆயில் பெயிண்ட் அல்லது எனாமல் பெயிண்ட் கொண்டு நிரப்பவும்...
கற்கள் வரும் இடத்தில Stone effect paint  போடவும்...பிறகு மண்டபம்,நகைகள்,பீடம் போன்ற இடங்களுக்கு 
தங்க நிற பெயிண்ட் பூசி காய விடவும்...