badge

Followers

Friday 29 September 2017

ஸ்வேத வர்ண தாமரையில் அமர்ந்திருப்பவளே....



ஸ்வேத வர்ண தாமரையில் அமர்ந்திருப்பவளே
ஸ்ரேஷ்டமான வாழ்க்கை அமைத்து தந்தவளே
ஸ்லோகங்களில் குடியிருந்து காட்சி தருபவளே
ஸ்ரத்தையாக எனைஸ்லோகம் எழுததூண்டுபவளே
ஸரத்கால மேகம்போல் கருத்தகூந்தல் உடையவளே
ஸுஸ்வரமாக பாடலை பாட அருள் செய்பவளே
ஸகல கலா வாணி எனை சதா ரக்ஷிப்பவளே
ஸந்ததியர்க்கு சகல கலைகளையும் அருள்பவளே
ஸாஸ்வதமாக ஸ்லோகங்களை பக்திபிரவாகமாக
ஸர்வ காலமும் எழுதும் திறமையை தந்து
ஸ்ரேயஸ்யோடு முக்தி கிடைக்க அருள்வாயே
ஸரஸ்வதியே சகல கலைவாணியே சரணம் தாயே 

1 comment:

  1. கலைவாணியின் கருணை தேன்மழையே...

    விஜயதசமி வாழ்த்துகள்.

    ReplyDelete