badge

Followers

Monday 8 October 2018

மதுரை மீனாட்சி அம்மன் ...தனி சிறப்புகள்


 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை.

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி.

Friday 7 September 2018

எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???



எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன😚 🌸*        👇👇

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸

Monday 3 September 2018

வங்கி கணக்குகளும் நாமினேஷனும்




வங்கி கணக்குகளும் நாமினேஷனும்

நேற்று நாமினேஷன் பற்றி ஒரு பதிவைப் பார்க்க நேரிட்டது. அதில் வங்கி மட்டுமல்லாது பி.எப், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றிலும் நாமினேஷன் செய்வது எப்படி என்று விளக்கியிருந்தார்கள். எனஂனடா நம்ப சப்ஜெக்ட்டில் யாரோ கோல் அடிக்கிறார்களே என்று யோசித்து கொண்டிருந்தேன். ஏதோ திரும்பி வருகிற வழியில் என்னால் முடிந்த கமென்ட் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது நிறைய பேருக்கு நாமினேஷன் பற்றிய தவறான புரிதல் உள்ளது. முப்பந்தைந்து வருடங்களாக வங்கியில் நாமினேஷன் போடாதவர்களுடைய கஷ்டங்களை கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அதைப் பற்றி தெளிவாக்கும் முயற்சியே இந்தப் பதிவு.
இது சட்ட விளக்கமல்ல. நடைமுறையில் இதனை ஏன், எதற்கு, எப்படி செய்ய வேண்டும் அதனால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதன் விளக்கமே.  நாமினேஷன் வங்கி மட்டுமல்லாது பல விஷயங்களுக்கும் உள்ளது. என்னைப் பொறுத்த மட்டில் வங்கி சேவையைப் பற்றி மட்டுமே இந்த பதிவில் எழுதியுள்ளேன்.

நாமினேஷன் என்றால் என்ன.

நாமினேஷன் பற்றி பேச வேண்டுமென்றால் இறப்பு பற்றி பேசாமல் தொடங்க முடியாது. (இந்தக் கொடுமையை வங்கி பணியாளர்களும், காப்பீடு பணியாளர்களும் நன்கு அறிவார்கள். தன்னுடைய பிற்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வந்த வாடிக்கையாளரிடம் ஒரு வேளை உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்று சொல்லும் போது அவர் முகம் போகும் போக்கை பார்க்க சகிக்காது. )

நாம் செய்துள்ள முதலீட்டினை நமக்கு பிற்காலம் வங்கி யாரிடம் கொடுத்தால் வங்கிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை வங்கிக்கு தெரிவிக்கும் ஒரு பதிவுதான் நாமினேஷன்.

அதாவது

1.  வாடிக்கையாளரின் இறப்புக்குப் பிறகே நாமினேஷன் என்பது நடைமுறைக்கு வருகிறது. அதுவரை நாமினேஷன் என்பது வெறும் ஒரு பதிவு அவ்வளவுதான்.  வாடிக்கையாளர் இறப்பதற்கு முன்னால் நாமினேஷன் செய்யப்பட்டவரால் தலை கீழாக நின்றாலும் பணத்தை எடுக்க முடியாது.

௨. இது வாடிக்கையாளருக்கு சௌகர்யம் என்பதை விட வங்கிக்கு சௌகர்யம் என்றே ஏற்படுத்தப்பட்டது. ஒருவரது பணத்தை அவர் இல்லாத நிலையில் மற்றொருவரிடம் கொடுப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் தரும்  ஆவணமே நாமினேஷன். அவ்வாறு நாமினேட் செய்யப்பட்டவரிடம் பணத்தை கொடுக்கும் பட்சத்தில் வங்கி தனது கடமையை சரியாக செய்ததாக கருதப்படும் (bank is absolved of its liabilities by disposing the assets to the nominee)

3.  நாமினி என்றால் வாரிசு என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரின் பணத்தை அவரது பிற்காலம் அவரது சட்டபூர்வ வாரிசுகாரர்களுக்கு பங்கிட்டு கொடுப்பது மட்டுமே அவரது வேலை. வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும் நடைமுறையை எளிதாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே நாமினேஷன்.

நாமினேஷன் எப்படி செய்ய வேண்டும்.

1. புதிதாக ஒரு முதலீடு அல்லது வங்கிக் கணக்கு செய்யும் பொழுது அந்த கணக்கு தொடங்கும் படிவத்திலேயே கண்டிப்பாக நாமினேஷன் படிவம் இருக்கும் (சட்டப்படி நாமினேஷன் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  யாருக்காவது வேண்டாமென்றால் அவர்கள் எங்களுக்கு நாமினேஷன் வேண்டாம் என்று டிக்ளேர் செய்ய வேண்டும்). அந்த படிவத்தில் நாமினியின் பெயர், வயது மற்றும் உறவு முறை குறிப்பிட வேண்டும் (நண்பர் என்றும் குறிப்பிடலாம்). அந்த நபர் 18 வயதுக்குட்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில் அவர் பதினெட்டு வயது எட்டும் வரை அந்தப் பொறுப்பை யார் வகிப்பார்கள் என்றும் குறிப்பிட வேண்டும்.

௨. பழைய கணக்குகளில் நாமினேஷன் இல்லையென்றால் தனியாக பாரம் இருக்கிறது. அவற்றை நிரப்பி வங்கியில் கொடுக்கலாம்.

3. உங்களது நாமினேஷன் கணக்கில் பதிந்த பிறகு வங்கி உங்களுக்கு ஒரு அத்தாட்சி தருவார்கள். (பல சமயங்களில் உங்களது கணக்கு புத்தகத்திலோ, டெப்பாசிட் ரசீதிலோ இந்த அத்தாட்சி பதிவு செய்யப்பட்டிருக்கும் )

4. நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே நாமினியின் பெயர் தெரியும் விதமாக பதிவு செய்யப்படும். இல்லையென்றால் பதிவு எண் மட்டுமே வழங்கப்படும் (இந்த முறை எதற்காக என்பதை பின்னால் கூறுகிறேன்)

5.  பதிவு செய்யும் நேரத்தில் நாமினி உங்களுடன் வரவேண்டிய அவசியமில்லை, அவரது கையெழுத்து தேவையில்லை. அவரது போட்டோ, அடையாள அட்டை எதுவுமே தேவையில்லை.

6. நாமினேஷன் என்பது உங்களது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்

நாமினேஷன் செய்தால் வரும் நன்மை

நாமினேஷனால் வரும் நன்மை என்பதை சொல்ல வேண்டுமென்றால் நாமினேஷன் செய்யாமலிருந்தால் வரும் தீமையைச் சொல்ல வேண்டும். உங்களது கணக்கில் நாமினேட் செய்யப்படாமலிருந்தால் அதில் இருக்கும் தொகையைப் பொருத்து உங்களுடைய வாரிசுதாரர்கள் கீழ்க்கண்ட சர்ட்டிபிகேட்டுகளுக்காக பல இடங்களில் ஏறி இறங்க நேரிடும்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. வாரிசு சான்றிதழ் (குறைந்தது 45 நாட்கள் ஆகும். வில்லேஜ் ஆபிசிலிருந்து, தாசில்தார் அலுவலகம் வரை கண்டிப்பாக ஏறி இறங்க வேண்டும்)
    3. உங்கள் சார்பாக குடும்ப உறுப்பினரல்லாத ஒருவர் வாடிக்கையாளர் இறந்த விஷயத்தையும் யாரெல்லாம் வாரிசு என்பதையும் விளக்கி வங்கிக்கு உங்களது க்ளெய்மை தர வேண்டும். அந்தப்படிவத்தை படித்து பார்த்தாலே கையெழுத்திடுவதற்கு அவர்கள் அச்சப்படுவார்கள்.
    4. வாரிசு சான்றிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் சேர்ந்தோ அல்லது அவர்கள் அனைவரும் சிபாரிசு செய்யும் குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாகவோ க்ளெய்ம் செய்யலாம்
    5. குடும்பத்தில் உறுப்பினரல்லாத ஒன்றோ இரண்டோ நபரது உத்தரவாதம். (மிகப் பெரிய சிக்கல். இந்தக் காலத்தில் யார் இதை தருவார்கள்). இவ்வாறு உத்தரவாதம் செய்யும் நபரது சொத்து வங்கி அதிகாரியால் மதிப்பிடப்படும். அவரது மதிப்பு க்ளெய்ம் மதிப்பை விட கண்டிப்பாக அதிகமாக இருத்தல் அவசியம். (சில சமயங்களில் அசையாத சொத்தின் நகல் வாங்கி, சொத்தின் மதிப்பீடு செய்வது வரை நடந்திருக்கிறது)
    6. உங்களது வங்கி மேலாளரின் க்ரேடைப் பொறுத்தும் உங்களது கணக்கிலிருக்கும் தொகையைப் பொறுத்தும் செட்டில்மென்ட் செய்ய ஆகும் காலம் மாறுபடும்.

இவையெல்லாம் எழுதுவதற்கு எளிது. ஆனால் நடைமுறையில் எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

சரி நாமினேஷன் செய்யப்பட்டிருந்தால் என்ன தேவையென்பதை இப்போது பார்ப்போம்.

    1. இறப்பு சான்றிதழ்
    2. நாமினியின் அடையாள அட்டை
    3. விண்ணப்பம்.

அனைத்து மேலாளர்களுக்கும் நாமினேஷன் செய்யப்பட்ட கணக்கில் உடனடியாக செட்டில்மென்ட் செய்ய அதிகாரமுள்ளது. அதிக பட்சமாக ஒரு நாள் மட்டுமே.

இப்போது புரிகிறதா ? ஏன் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்.

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட வேண்டும்

    1. வங்கியிலுள்ள அனைத்து முதலீடுகளும்
    2. லாக்கர் (ஒரே சமயத்தில் இரண்டு பேரை நாமினேஷன் செய்யலாம்)

எவையெல்லாம் நாமினேஷன் செய்யப்பட மாட்டாது

    1. வங்கியில் கடனுக்காக கொடுத்திருக்கும்  நகைகள் (கோல்ட் லோன்)
    2. அனைத்து வகையான கடன்களும்

பொதுவான கேள்விகள் மற்றும் தவறான புரிதல்கள்.

கேள்வி. நாங்கள் எங்களது டெப்பாசிட்டை ஜாயின்டாக வைத்திருக்கிறோம் எங்களுக்கு எதற்கு நாமினேஷன் ?

பதில். பொதுவாகவே கணவன் மனைவி பெயரிலோ குடும்ப உறுப்பினர் பெயரிலோ ஜாயின்டாக வைத்திருப்பீர்கள். இன்றைய அவசர உலகத்தில் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பொதுவாகவே கணவன் மனைவி இருவருமே இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாயின்ட் அக்கவுண்ட் உங்கள் வாரிசுகளுக்கு சென்றடைவதில் சிக்கல்களை அதிகமாக்குமே தவிர குறைக்காது. ( உதாரணமாக இந்து சட்டப்படி வாரிசு என்றால், இறந்த நபரது அப்பா, அம்மா, கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் இவர்களில் யாராவது ஏற்கனவே இறந்திருக்கும் பட்சத்தில் அவர்களது வாரிசுகள் ). ஜாயின்ட் அக்கவுன்டாக இருந்தாலும் நாமினேஷன் செய்வதே சிறந்தது.

கேள்வி. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. யாரை நாமினேட் செய்ய வேண்டும்.

பதில். யாரை வேண்டுமானலும் செய்யலாம். அந்த நபர் உங்களது சொத்தை நிர்வகிக்கும் ட்ரஸ்டியாகிறார்.

கேள்வி. நாங்கள்தான் எங்களது சேமிப்பு கணக்கில் நாமினேஷன் செய்து விட்டோமே

பதில். எல்லா கணக்கிற்கும் தனித்தனியாக நாமினேட் செய்யப்படுவது அவசியம்

கேள்வி. நாங்கள் 30 வருடத்திற்கு முன்பே கணக்கு வைத்திருக்கிறோம். கணக்கு தொடங்கும் போதே நாமினேஷன் செய்து விட்டோம். பிறகு எதற்காக இப்போது செய்ய வேண்டும்.
பதில்.  30 வருட இடைவெளியில் வங்கிகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. கணிணி மயமாக்கப்ட்ட உடன் உங்கள் கணக்கு எண் எல்லாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் நாமினேஷன் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் கணக்கு தொடங்கிய சமயத்தில் நீங்கள் திருமணமாகதவராக இருந்திருக்கலாம். அப்போது உங்களது பெற்றோரையோ சகோதரர்களைோ நீங்கள் நாமினேட் செய்திருக்கலாம். இப்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி அவற்றை சரி செய்து கொள்ளவும்.

கேள்வி. நான் நாமினேட் செய்யும் நபருக்கு என்னுடைய மறைவுக்கு பிறகு வங்கி தானாக பணம் கொடுத்து விடுமா ?

பதில். சினிமாவில் தான் அதெல்லாம் நடக்கும். க்ளெய்ம் என்பது முக்கியம் நாமினி க்ளெய்ம் செய்யாத வரை வங்கிக்கு பணத்தை கொடுக்கும் அதிகாரமில்லை

கேள்வி. எதற்காக நாமினியின் பெயர் தெரியப்படுத்த வேண்டுமா வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

பதில். உங்களுக்கு பிறகு பணத்தை திரும்பப் பெறும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தால் என்னவாகும் ? (இந்த இடத்தில் தமிழ் சினிமாவை கற்பனை செய்து கொள்ளவும். அந்த நிலைமையை போக்கவே இந்த ஏற்பாடு)

கேள்வி. எங்களது தந்தை அவரது வங்கிக் கணக்கையெல்லாம் எனது சகோதரருக்கு நாமினேஷன் மூலம் கொடுத்து விட்டு இறந்து விட்டார். அதில் எனக்கு சட்டப்படி உரிமை உள்ளதா.

பதில். கண்டிப்பாக உரிமையுள்ளது. உங்களுக்கு நியாயமான பங்கு தருவதற்கு அவர் ஒப்புக்கொள்ள வில்லையென்றால்
    1. வங்கி பணத்தை அவரிடம் ஒப்படைக்குமுன் நீதி மன்றத்தில் தடையாணை பெறலாம். அதற்கு பின் நாமினேஷன் செல்லாக் காசாகிவிடும்.
    2. வங்கி அவரிடம் பணத்தை கொடுத்து விட்டது என்றால் நீங்கள் வழக்கு தொடரந்து சட்டப்படி உங்களது பங்கை திரும்பப் பெறலாம். ஆனால் வங்கியை இழுக்க முடியாது.

நாமினேஷன் செய்யாமலிருப்பதற்கான காரணம் என்ன ?

நாமினேஷன் செய்யாததன் காரணமாக கஷ்டங்களை அனுபவித்தவர்களை நிறைய சந்தித்திருக்கிறேன்.   இவ்வளவு சொன்னாலும் ஏன் நாமினேஷன் செய்ய மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தபோது கிடைத்த சில விளக்கங்கள்.

    1. வாரிசுகளிடம் நம்பிக்கையின்மை
    2. அசட்டு நம்பிக்கை (எனக்கு ஒன்றும் நேராது. எனக்கு முன்னாடி அவ போயிறுவா)
    3. அறியாமை ( ஜாயின்ட் அக்கவுண்ட் வைத்திருக்கேன். ஆட்டோமேட்டிக்கா அவளுக்குதான் போகும் )
    4. மனைவிகளுக்கு தெரியாமல் வைத்திருக்கும் பணம். (அவளுக்கு இதெல்லாம் புரியாது)

இதையெல்லாம் படித்துவிட்டு கண்டிப்பாக உங்களது கணக்கில் நாமினேஷன் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Tuesday 14 August 2018

அம்மனின் 51 சக்தி பீடங்கள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்!*

*தமிழ்நாடு*

1. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு

2. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

3. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு

4. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு

5. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு

6. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு

7. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு

8. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு

9. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

10. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

11. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

12. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

13. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

14. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

15. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

16. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

17. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

18. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

*கர்நாடகா*

19. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா

20. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

21.மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

 *உ.பி.*

 22.விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.

23.விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.

*ம.பி.*

24.சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.

25.மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.

*ஆந்திரா*

 26.பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

27.ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

28.மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

*கேரளா*

29.பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

*ஹரியானா*

30.ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா

31.முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

*ஒரிசா*

32.பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

 *மகாராஷ்டிரா*

 33.பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

 34.திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

 35.மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

*குஜராத்*

36. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

37.அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

*அஸ்ஸாம்*

 38.காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

*ஒரிசா*

39. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

*மிர்ஜாப்பூர்*

 40.நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

*மேற்கு வங்காளம்*

 41.பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

*நேபாளம்*

42.பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

*பீகார்*

43.மந்த்ரிணி-கயை-  (திரிவேணிபீடம்) பீகார்

*பஞ்சாப்*

44.திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்

*ராஜஸ்தான்*

45.காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

*இமாசலப்பிரதேசம்*

46.ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

47. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

 48.நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

 49.மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்

*காஷ்மீர்*

50.வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்

*திபெத்*

 51.தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத் ,.

Sunday 12 August 2018

ஊஞ்சல் ஆடுவது எதற்காக?





 ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம்.
வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.
பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.
இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.
திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.
* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.
* கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
*
தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.
மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.
* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது.
சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.
கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.
வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,
ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.
சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.
* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.
வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.
முக்கிய குறிப்பு:-
இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.




Saturday 11 August 2018

சாய் இருக்க நமக்கு ஏன் கவலை...




பாபா நீ
என்னுடன்
இருப்பதால்தான்
கவலை இல்லாமல்
இருக்கிறேன்

நமது உழைப்பை பிறர் வாய் தின்னும்போதும், நம் உழைப்பின் பலனை பிறர் அனுபவிக்கும்போதும் வருத்தப்படவேண்டாம்.

அவர்கள் நம் கர்மாக்களை, நமது பாவங்களை உண்டும், அனுபவித்தும் நம்மை விடுதலை செய்கிறார்கள்.

சாய் இருக்க நமக்கு ஏன் கவலை.


Sunday 5 August 2018

நா காக்க....





ஒரு பாம்பு கார்பென்டரி ரூம்குள்ள தெரியாம வந்திடுச்சு...
உள்ளே உள்ள கார்பென்டரி கருவிகள் மேல ஊர்ந்து போகும்போது எதோ ஒரு கூர்மையான பொருளால் அதோட உடலில் சிறு காயம் ஏற்பட்டிடுச்சு...
உடனே சட்டுன்னு கோபத்தோட அங்க இருந்த ஒரு கூரான ரம்பத்தை போய் கடிக்க ட்ரை பண்ணிச்சு... இப்போ ரம்பத்தின் பற்கள் அறுத்தால் அதன் வாய் பகுதியில் கிழிச்சு ரத்தம் வர ஆரம்பிச்சது.

 பாம்புக்கு கோபம் தலைக்கேறி.... அந்த ரம்பத்தை சுற்றி வளைத்து கொல்லும் நோக்கத்தோட சுத்தி இறுக்க ஆரம்பிச்சது... தன் பலம் முழுவதையும் சேர்த்து.....

என்ன ஆச்சு... முழு உடலும் ரம்பத்தின் பற்களால் வெட்டப்பட்டு, காயம் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது...

 என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்கிறதுக்கு முன்னால அந்த பாம்பு தனது செயலாலேயே உடல் துண்டாக்கப்பட்டு இறந்து போச்சு....


இதே போல தான் நாம் நமது வாழ்க்கையிலும் மத்தவங்க கிட்ட தேவையில்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்திட்டு அதன் வீரியம் நம்மையே தாக்கும் போது நாம பண்ணின தவறு என்னங்கிறதை உணர்ந்து அதிலிருந்து விலகி போகாமல், மேலும் மேலும் கடினமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிச்சு அதன் எதிர்விளைவால் நமது மன நிம்மதியை இழந்து.... தேவையற்ற கோபம், பதட்டம், மன அழுத்தம் இவற்றால் நமது உள்ளம் மற்றும் உடல் நலத்தையும் கெடுத்துக்கொண்டு..... நம்மையே இழந்து விடுகிறோம்....

நா_காக்க....

Thursday 19 July 2018

ஆடி மாத சிறப்புகள் ...


ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக் கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் (ஆகஸ்டு 6) மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதி யின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை கஷ்டமான மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன் னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவ தைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

Sunday 15 July 2018

தேனின் பயன்கள்...



தேன்....

கொழுப்பைக் குறைக்க, நீரிழிவை கட்டுக்குள் வைக்க, வாயுத் தொல்லைகளை குறைக்க, தொற்று நோய்களை குணப்படுத்த, சக்தி கொடுக்க, குமட்டலைத் தடுக்க, உடல் எடையைக் கூட்ட, தூக்கமின்மையை போக்க, ஆஸ்துமாவைக் குறைக்க, பொடுகை நீக்க தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என எல்லாவற்றுக்கும் தேனை நாம் பயன்படுத்தலாம்.

தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது. தேனில் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் உண்மை என்னவென்றால் இனிப்பான ருசியோடு, இருமலை குணமாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் கூட்டும் சக்தி தேனுக்கு உண்டு.


தேன் என்பது என்ன?


மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை. தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது. இந்த அற்புதக் கலவை இயற்கையான குணப்படுத்தும் தன்மையை மேலும் அற்புதமாக்கியது. இதிலுள்ள ரகசியக் கூட்டுப் பொருள் வீட்டு வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தேனை அப்படியே சுவைக்கலாம் அல்லது மசாலாக்கள் மற்றும் தண்ணீரோடு கலந்து அதன் அனைத்துப் பயன்களையும் பெறலாம்.


ஊட்டச்சத்துக்கள்----


• சோடியம் 6 மிகி
• புரதம் 15 மிகி
• கார்போஹைட்ரேட் 17கி
• கொழுப்பு 0
• பேந்தோத்தேனிக் அமிலம் 05 மிகி
• ரிப்போபிலேவின் 06 மிகி
• வைட்டமின் சி 1 மிகி
• துத்தநாகம் 03 மிகி
• இரும்பு 05 மிகி
• பொட்டாசியம் 0 மிகி
• கால்சியம் 0 மிகி
• பாஸ்பரஸ் 0 மிகி
• தண்ணீர் 6 கிராம்
• பிரக்டோஸ் 1 கிராம்
• மால்டோஸ் 5 கிராம்
• குளுக்கோஸ் 5 கிராம்


*⚡கொழுப்பு சேராது⚡*


கொழுப்பு உடலில் சேர்வது பயமுறுத்தும் உடல் பிரச்சினை. அதை உடனே சரி செய்ய வேண்டும். பல ஆய்வுகள் தெரிவித்த முடிவின் படி தேன் சாப்பிட்டால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது


ஒரு ஆய்வு தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் 70 கிராம் தேனை உட்கொண்டதில் உடலில் சேர்ந்த கொழுப்பு மூன்று சதவீதம் குறைந்ததை நிரூபிக்கிறது. நீங்களும் இதை முயற்சித்து தேனை தினசரி சேர்த்துக் கொண்டு எளிதில் கொழுப்பைக் குறைக்கலாமே!


நீரிழிவிற்கு தேன் சிகிச்சை


இனிப்பானது தேன், ஆனால் ரத்தத்தில் சர்க்கரை சேராது. இயற்கையின் மகத்தான கொடை மனிதனுக்கு தேனே. நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் பாதுகாப்பானது. உணவிற்கு முன் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் உள்ள C-பெப்டைட் விரதத்தின் போது சீராக இருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன. தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, எனினும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து தேன் எடுத்துக்கொள்ளலாமே! இதுவே பாதுகாப்பானது.


வாய்வுத் தொல்லை-----


இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று வித்தியாசமில்லாமல் வாய்வுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எல்லாவிதமான வயிற்று உபாதைகளுக்கும் ஆண்டிமைக்ரோபயல் மற்றும் ஆக்ஸிஜனேற்றக் கூறுகள் உள்ள தேன் இயற்கையான வழியில் குணப்படுத்த உதவுகிறது. தேனால் சிறந்த பயன் பெற வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பயன்படுத்தலாம். மெத்தில்க்ளைகோஜெல் எனப்படும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ள - தேனை எடுத்துக்கொள்வது விரைவாக வயிற்று உபாதைகளை சரி செய்யும். ஜீரணப் பாதையில் உள்ள நுண்கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் தேனில் உள்ளது.


*⚡நோய்த்தொற்று⚡*

பாக்டீரியா பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. நம் உடலை இத்தகைய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தினசரி உணவில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. தேனில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, மேலும் உடல்நிலை பாதிப்படையாமல் பாக்டீரியாக்களிடமிருந்து உங்களை ஒரு கவசம் போல் பாதுகாக்கும்.


உடற்சக்தி----


தேனில் இனிப்புச் சுவையுடன் மெத்தில்கிளையோக்ஸ்சால் சேர்ந்துள்ளதால் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இந்தச் சேர்க்கை சைட்டோகைன் வளர்ச்சியைத் தூண்டி, உங்களின் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. தேனில் ஆக்ஸிஜனேற்றப் பண்புடன், இத்தகைய நோயெதிர்ப்பு சக்திகளும் சேர்ந்து உங்கள் உடல் சுறுசுறுப்புடனும், நல்ல சக்தியுடனும் செயல் பட உதவுகிறது.


குமட்டல்.....


காலை எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் உணவை சரிவர எடுத்துக் கொள்ள முடியாமல் செய்கிறது. இதனால் உங்கள் உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாகி விடுகிறது. நீங்கள் தேனை சிறிதளவு எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்புகளை விரைவாக மாற்றுகிறது. இந்த சிகிச்சைக்கு எலுமிச்சையுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தேன் குமட்டலை நிறுத்துவதுடன் வாந்தி வராமலும் தடுக்கிறது. எலுமிச்சையின் புளிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகரைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்தலாம்.


எடை இழப்பு-----


இந்த தங்க நிற தேன் நாவில் நீர் ஊரச் செய்யும் வகையில் உங்கள் எடையைக் குறைக்கிறது. மிக விரைவில் எடை குறைய நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். நீங்கள் எடையைக் குறைக்க முயலும் இந்தப் பயணத்தில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உபயோகிக்கும் போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளும் உணர்வை கொடுத்து, எடையையும் குறைக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையை விட வேறுபட்ட வழியில் நம் உடலினுள் செயல்படுவதை தெரிவிக்கிறது.


*⚡தூக்கம்⚡*


தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் தேவை. எனவேதான் உணவு வல்லுனர்களும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தூக்கமும் ஓய்வும் மிகத் தேவை எனப் பரிந்துரைக்கிறார்கள். போதுமான அளவில் தூங்காத போது, அது பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு மேசைக் கரண்டி அளவில் தேனை படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மையைப் போக்கி விடும். இந்த வழியில் கல்லீரலில் உள்ள, ஆற்றலை உருவாக்க மிகவும் அவசியமான கிளைகோஜென் அளவை சீராக்கி, அவை காலியாகாமல் பாதுகாக்கிறது. இந்த செயல்முறை ஆழ்ந்த உறக்கத்தின் போதும் நடை பெற தேன் பெரிதும் உதவுகிறது.


ஆஸ்துமா---


அச்சுறுத்தும் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க தேன் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. தொல்லை தரும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்துவதோடு மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பைப் போக்கி சுவாசத்தை எளிமையாக்குகிறது. மேலும் காற்று செல்லும் வழியில் உள்ள சளிச் சவ்வுகளை மென்மையாக்குகிறது. குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளும் தேன் ஆஸ்துமா அறிகுறியான மூச்சுக்குழாயில் சேரும் சளியை எதிர்த்துப் போராடுகிறது.


பொடுகு---


பொடுகுத் தொல்லை தலையில் நமைச்சலை ஏற்படுத்தி எரிச்சலூட்டும். இங்கே அதற்கான எளிய சிகிச்சையைப் பார்ப்போம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இத்தகைய எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. தேனை உணவில் சேர்த்துக் கொள்வது போலவே, தலையில் தேய்ப்பதும் பாதுகாப்பானது. போடுகினால் பாதிப்படைந்த தலையை குணப்படுத்த தண்ணீரும், தேனும் சம அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி பொடுகு உள்ள இடத்திலும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். தொடர்ந்து செய்யும் போது வித்தியாசத்தை சில வாரங்களில் காணலாம்.


தோலுக்கு தேன்---

பளபளப்பான, கரைகளற்ற முகப் பொலிவிற்கு தேன் ஒன்றே தீர்வாகும். தொடர்ந்து தேனை முகத்தில் தடவும் போது, முகப்பரு, வடுக்கள் போன்ற பலவித தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திக்கும், கிருமி அழிப்பு சக்திக்கும் நன்றி சொல்வோம். சுவை மிகுந்த தேன் வடுக்களை நீக்கி, கரைகளைப் போக்குவதோடு மட்டுமன்றி மீண்டும் மீண்டும் அவை வராமல் தடுக்கிறது. கவலை தரும் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் கோடுகளையும் போக்க இன்றே தேனைத் தடவி நிவாரணம் பெறுங்கள். நிறைய பணம் செலவு செய்து அழகு சாதனங்களை வாங்குவதற்கு முன் ஒரு தேன் குடுவையை வாங்குங்கள். இதுவே முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து மினுமினுக்க வைக்கும்.


✦ தேனின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தேனால் குணமாக்க முடியாத உடல் நலப் பிரச்சனையை காண்பது கடினம். இது ரசாயனங்கள் கலந்த பானங்களுக்கு மாற்றாக பாதுகாப்பான வழியில் அளவற்ற சக்தியையும் ஆரோக்கியமான வழியில் கிடைக்கச் செய்கிறது.

Saturday 14 July 2018

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?



பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?
A few basic info on real estate.

*பட்டா* ( Patta )

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை
குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா*  ( Chitta )

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல்*  ( Documents of details of the property )

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்* ( Land reserved for living )

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம்*  ( Land reserved for common purposes )

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம்*  ( Land donated for building temples )

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார்*  ( Owner of land who has donated for public use )

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு. ( Land Area )

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது. ( Location limits on all four sides )

ஷரத்து= பிரிவு.( Part )

இலாகா = துறை.( Department )

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
( Sale Deed registration )

*வில்லங்க சான்று* ( Encumbarance Certificate )

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின் விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை = வாரிசுரிமை (succession right )

*தாய்பத்திரம்* (Parent deed)
ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*
குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்* ( possession right)
நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*( Handing over of the right )
நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி = வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் = ( Fertile Land for cultivation )
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் = ( Land depending on rains for cultivation )
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை* (Lease)
ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

Tuesday 10 July 2018

துளசியின் மகிமை ...




துளசியின் மகிமை ...

எந்த இடத்தில துளசி செடி வளர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்கின்றனர். துளசி பெருமாளுக்கு மகாத்மியம் மிக்கது. சத்தியபாமா தன் ஆபரணங்களால் பெருமாளை எடைபோட நினைத்த போது , ருக்மிணி ஒரு துளசி தளத்தால் பெருமாளின் மகிமையை எடுத்துரைத்தாள். துளசியின் இருப்பிடம் மஹாலக்ஷ்மியின் வசிப்பிடம்.

அனுமன் சீதா பிராட்டியைத் தேடி அலைந்த போது ஒரு மாளிகையில் துளசி மாடத்தையும், நிறைய துளசி செடியையும் கண்டு, இங்கு யாரோ ஒரு விஷ்ணு பக்தர் ஆசிக்கிறார் என்று நினைத்து, அங்கு சென்று பார்த்தபோது , அது விபீஷணனின் மாளிகை என்பது தெரிய வந்தது.

சீதா தேவி துளசியை பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ இராமபிரானைத் தன் கணவனாக அடையப்  பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது. எவரது இல்லத்தில் துளசி செடி நிறைய உள்ளனவோ அந்த இடம் புனிதமான திருத்தலம் என்று போற்றலாம். துளசி தளத்தால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து ஆராதிப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது என்று பத்ம புராணம் தெரிவிக்கின்றது.


Saturday 7 July 2018

ஸ்ரீ மணக்குள விநாயகர் , பாண்டிச்சேரி



ஸ்ரீ மணக்குள விநாயகர்
பாண்டிச்சேரி

மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.

தொண்டை மண்டலத்தில் வேதபுரி
அகஸ்தீசபுரம் வேதபுரம்
எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.

600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர்.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி;  “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

தலவரலாறு

ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!

கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர்.

அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது.

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர்.

பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.

மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே.

மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார்.

வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன.

மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது.

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

தங்கத்தேர் உலாவும் உண்டு.

அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள்.

தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

பாடியோர்

மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

கிணற்றின் மீதுதான் மூலவர் :

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி.

பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது.

இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தல சிறப்பு:

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது.

இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.

தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.

தலபெருமை:

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே.

உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது.

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.

கோவில் யானை லட்சுமி

மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது .

அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது .

லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்ல கூடிய ஒரு நிலை இன்று உள்ளது .

மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயில் முன் லட்சமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும்

பிரார்த்தனை

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு

. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.

நேர்த்திக்கடன்:

உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது.

அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம்.

இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள்.

தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

திருவிழா:

விநாயகர் சதுர்த்தி - இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். பிரம்மோற்ஸவம் - ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4மணி முதல் இரவ 10 மணி வரை
கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 132km.
கும்பகோணத்தில்
இருந்து சென்னை சாலையில் வடலூர் சென்று
வடலூரில் இருந்து கடலூர் சென்று பாண்டிசேரியை அடையலாம்.

புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .
புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .

“தொள்ளைக் காது சித்தர்” பற்றி

புதுச்சேரி சித்தர்களின் பூமி ஆகும்.
41 சித்தர்கள் இங்கு இருந்தார்கள்.
அவர்களின் ஜீவ சமாதி இங்குள்ளது.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார்.

அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.

இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார்.

வாய் பேசா ஊமையானார்.

ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார்.

அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது.

அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-
கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார்.

தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார்.

இது அவரின் தினசரி வாடிக்கையானது.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார்.

மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார்.

தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.
அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல
சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது.

பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார்.

அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர்.

இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்

Thursday 5 July 2018

ஓம் சாய் நமோ நமஹ...

ஓம் சாய் நமோ நமஹ...
ஸ்ரீ சாய் நமோ நமஹ...
சத்குரு சாய் நமோ நமஹ...
ஷீரடி சாய் நமோ நமஹ....







நரசிம்மர் வழிபாடு 40 தகவல்கள்





 நரசிம்மர் வழிபாடு 40 தகவல்கள்

1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.

7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத் தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. ``எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறி உள்ளார்.

23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்மரை வழிபடும் போது ``ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.

"ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் "

Monday 2 July 2018

சுத்த நெய் தரும் ஆரோக்கிய பலன்கள்




தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?


காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள் அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பானத்தைக் குடிப்பார்கள்
.
ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

ஆம், பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.

அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம். இக்கட்டுரையில் காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.

சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.

நெய் ஒரு நேச்சுரல் லூப்ரிகண்ட். ஆகவே இது மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.

நெய்யை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மூளைச் செல்கள் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு நினைவாற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். அதோடு அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கப்படும்.

பெரும்பாலானோர் நெய் உடல் பருமனை அதிகரிக்க மட்டுமே செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு உடல் எடை தான் குறையும்.

நெய்யை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும். அதோடு தலைமுடி மென்மை மற்றும் பட்டுப் போன்று ஆவதோடு, தலைமுடி உதிர்வதும் தடுக்கப்படும்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள், பாலில் இருந்து பெறப்படும் நெய்யை சாப்பிட அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நெய்யில் லாக்டோஸ் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதால், அது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.


(courtesy -net )

Sunday 1 July 2018

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா....

விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்

யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு, நான்,விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன்.

இதன் விளைவாக,அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.

-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

Wednesday 27 June 2018

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு




மாரடைப்பு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!

#பகிர்வு#

உபயோகமானது எனக் கருதும் நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்வதை விட காபி பேஸ்ட் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Friday 22 June 2018

திருமலையில் பூஜை தீபாராதனை நேரங்களில்ஏன் மணி அடிப்பதில்லை?




திருமலையில் பூஜை தீபாராதனை

நேரங்களில் மணி அடிப்பதில்லை

அதற்கு காரணம் என்ன?

உங்களுக்கு தெரியுமா திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை

ஏன் ! மேலே படியுங்கள் !:

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !.
.
குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ...
அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !

திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........
திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !....

பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க .....

அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
'' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !''

அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !

திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,' மணியானகுழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பதுஇல்லை,

மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது.

ஓம் நமோ நாராயணா!!!

யாரையும் குறைத்து மதிப்பிடவேண்டாம் ...





 யாரையும்  குறைத்து  மதிப்பிடலாகாது...!!

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.

“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார்.

இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

“எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.

(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம்)

 பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணி கலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.

திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.

சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.

திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.

சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.

பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.

பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.

கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.

கதைக்கு வருவோம்….

பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.

அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.

“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அதற்கு ஒப்புக்கொண்டார்.

#ஸ்ரீஇராமரின்_பாதரக்ஷைகளை_சங்கு_சக்கரங்களின்_அம்சமாகப்_பிறந்த_பரதனும்_சத்ருக்னனும்_தங்கள்_தலைமேல் தாங்கி எடுத்துச்சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’ ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.

மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.

இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.

அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.

படித்ததை பகிர்கிறேன்....!



Monday 18 June 2018

குருவாயூர் கோயிலில் குந்துமணிக்கு என்ன சிறப்பு ???








குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள்.

இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும்., குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும்.

அது சரி.... குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்..?

இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள்.

அவளுக்கு ஸ்ரீகுருவாயூரப்பன் மிகவும் இஷ்டமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை அழைத்துச் செல்வார் யாருமில்லை. பணவசதி கிடையாது. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும்., அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் கொள்ளை ஆசை.



அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து., நன்கு அலம்பி., துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள்.

ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் பயணம் புறப்பட்டாள். அவள்தான்., வசதி படைத்தவள் அல்லவே..! அதனால் நடந்தே செல்லத் தீர்மானித்தாள். தொலை தூரம். வயது வேறு ஆகிவிட்டது. நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள்.

ஸ்ரமமாக இருப்பினும் "கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்கவும் வேண்டுமே" என்று தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.

கோவிலையும்அடைந்தாள். அவள் சென்ற நாள் அந்த மாதத்தின் முதல் நாள். அவள் கோவிலை அடைந்த சமயம்., கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன்., அவன் பக்தியை வெளிப்படுத்த., கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அதனால்தான் அந்த பரபரப்பு. சேவகர்கள்., அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர்.

இந்த வயதான பெண்மணி., தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. கிழவியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது.

அதே சமயம்., கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் "என்ன ஆயிற்று..?" என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை.

கலங்கிய மன்னனும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே
 ப்ரஸ்னம் கேட்டனர்.

அப்பொழுது கர்ப்பக்ருஹத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள்.
என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது.

உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டுமணிகளை., பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயோதிகப் பெண்மணியிடம் கொடுத்து., அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஸகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவள் ஆசையுடன் குண்டுமணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும்., யானையின் மதம் அடங்கியது.

அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

பகவான் வஸ்துக்களின் உயர்வு தாழ்வைப் பார்ப்பதில்லை. உள்ளத்தில் தூய்மையான அன்புடன் தரப்படும் பக்தியின் மேன்மையைத்தான் பார்க்கிறான்.