badge

Followers

Friday 22 June 2018

திருமலையில் பூஜை தீபாராதனை நேரங்களில்ஏன் மணி அடிப்பதில்லை?




திருமலையில் பூஜை தீபாராதனை

நேரங்களில் மணி அடிப்பதில்லை

அதற்கு காரணம் என்ன?

உங்களுக்கு தெரியுமா திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை

ஏன் ! மேலே படியுங்கள் !:

காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !.
.
குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ...
அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !

திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........
திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !....

பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க .....

அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
'' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !''

அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !

திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,' மணியானகுழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பதுஇல்லை,

மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது.

ஓம் நமோ நாராயணா!!!

1 comment:

  1. அருமையான தகவல்
    ஓம் நமோ நாராயணா!

    ReplyDelete