badge

Followers

Thursday 8 November 2012

காற்றினிலே வரும் கீதம்....







சாதாரண அலுமினியம் தகட்டில் வரையப்பட்ட இந்த மாயக்கண்ணனின்

குழல் ஓசை தான் இந்தக்  காற்றினிலே மிதந்து வரும் இனிய கீதமோ???



காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே...
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம் 
காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..


Wednesday 7 November 2012

ராதா மாதவம்-கேரளா மயுரல்





ராதா மாதவம் ...இது தான் இந்த ஓவியத்தின் பெயர்..

கேரளத்து சுவர் சித்திரம் எனப்படும்  kerala mural பாணியில் நான் வரைந்த இந்த ஓவியத்தை பார்க்கும் போது இந்தப்பாட்டு தான் எனக்கு நினைவுக்கு வந்தது...


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட….
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ…
பாவம் ராதா…
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட....

விநாயகனே வினை தீர்ப்பவனே...






ஒரு அழகான பீங்கன் தட்டில் glass colors + mseal  வைத்து இந்தப் பிள்ளையாரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...




விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே...

Wednesday 15 August 2012

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா...




குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...
(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்
(குழந்தை கண்ணன்..) 


அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.
(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...


மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலம் ...




தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
 (தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
 (தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
 (தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்


அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
 (தாயே)





Saturday 11 August 2012

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

                                     


















உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..!

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைக
ள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!

Sources:
----------
32,000 year old underwater city found - Dwarka:
http://www.youtube.com/
watch?v=Qgtk1mxgWDU&feature
=related
             

Friday 13 July 2012

ராதா கிருஷ்ணா -கேரளா ம்யுரல்




அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை 
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு 

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென 
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)

ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்






மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! 

ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: 
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: 


Wednesday 11 July 2012

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் -தஞ்சை பாணி ஓவியம்


       

                                                             
                                                                மதுராஷ்டகம்


(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!



(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!


இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
(நன்றி -இணையம்)



தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு 
வரும் இந்த   வெண்ணைத்தாழி கிருஷ்ணர்  ஓவியத்தை  
தங்கள் பார்வைக்கு இந்த ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்...

Visit my other blog too...

http://ushasrikumar.blogspot.in/2012/01/navaneetha-krishna-tanjore-painting.html

மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல்




மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் 
அம்மா பாட வந்தோம்...




இதோ  ....வாக்தேவி சரஸ்வதியை கேரளா ம்யுரல்  பாணியில் நான் வரைந்துள்ள ஓவியத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...


Visit my other blog ...
http://ushasrikumar.blogspot.in/2012/02/saraswathi-varadhe-kaama-rubinee.html

Saturday 7 July 2012

ஆலிலை கிருஷ்ணன்--தஞ்சை ஓவியம்






ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)



நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...




என் தஞ்சை பாணி  ஓவியத்தில் ஒய்யாரமாய் ஆலிலையில் படுத்து இருக்கிறான்  என் செல்லக்குட்டிக் கண்ணன் ...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ....





புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)



இந்த 3-D  ம்யுரலில்  பல அம்சங்களும் கண்ணனின் பிரதிபலிப்பாகவே உள்ளன...


யமுனை ஆற்றின் நீல  நிறம் ....அந்த நீரின் அலைகள்....

பிருந்தாவன தோட்டங்களின் ..பசுமை...

நந்தக்ராமத்தின் மண்ணின் சிவப்பு....

Symbolic க்காக  கண்ணனை நினைவு படுத்தும் புல்லாங்குழலும் மயில் இறகுகளும் 

ஒன்று சேர்ந்து  அந்த மாயவனை கண் முன் நிறுத்துவதாகவும் அவன் குழல் இசையை 

உணருவதாகவும் எனக்கு தோன்றுகிறது....

Friday 6 July 2012

நர்த்தன கணபதி-கேரளா ம்யுரல்


                                                           விநாயகர் அகவல்
                                                          ---------------------------



சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும்  
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரியமெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் 
பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென 
வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து 

தலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழ பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
 உடற்சக் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்ஷமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றான் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற்  கொன்றிட மென்ன 
அருள் தரும் ஆனந்த மளித்து என்செவியில் 

எல்லை இல்லா ஆனந்தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச் 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக விரைகழல் சரணே
                                                                                      -ஒளவையார்


(நன்றி--இணையம்)




தொந்தி குலுங்க செந்தாமரை மீது நடனம் இடும் இந்த ஆனந்த கணபதி,

கேரளா (kerala mural ) பாணியில் நான் வரைந்த .ஓவியம்...

இவ்வகை mural  ஓவியங்களை சாதாரணமாக

கேரள  கோவில் சுவர்களின் .காணலாம்...

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வகை சுவர் சித்திரங்கள்

இயற்கை வர்ணங்களால் வரையப்பட்டன....

இலை ,,பூக்கள்,,,மண் ,,கால்,கரி,கிளிஞ்சல் சுண்ணாம்பு

  போன்றவற்றில் இருந்து எடுக்கப்பட்ட

ஐந்து வர்ணங்களால் மட்டுமே இவ்வகை ஓவியங்கள் வரையப்பட்டன....

மஞ்சள்சிவப்பு,பச்சை,நீளம்,பழுப்பு ,+(கருப்பு ,வெள்ளை )ஆகிய நிறங்கள்

மட்டுமே இந்த ஓவியங்களில் உபயோக படுத்தப்படுகின்றன...

இன்று ,இவ்வகை ஓவியங்களை கான்வாஸ்ஸில்  acrylic colors

  உபயோகப்படுத்தி இந்த கணபதியை வரைந்தேன்....





லட்சுமி -தஞ்சை பாணி ஓவியம்




நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)

நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)

சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)



சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)

ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)

பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)

ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)

மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)

ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா
(நன்றி -இணையம்)
பல வருடங்களுக்கு முன் வரைந்த தஞ்சை பாணி லட்சுமி  ஓவியம்....
தங்கள் பார்வைக்காக .....

Wednesday 4 July 2012

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...






மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
(நன்றி- இணையம் )

செராமிக்  பௌடர் +பெவிகால்  சேர்த்து பிசைந்து செய்த
பூக்கள் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட  இந்த போட்டோ
frame ஐ  செய்து  லேசான  பளபளப்பு தரக்கூடிய Pearl colours  பூக்களுக்கு
பூசி,,இலைகளை பச்சை வர்ணம் கொடுத்து காயவிட்டேன்..(போட்டோ frame base  ரெடியாக  கிடைக்கிறது )
அதில் அரவிந்த அன்னையின் படத்தை வைத்தேன்...
மலர் விரும்பியான அன்னைக்கு மலர்கள் நிறைந்த போட்டோ frame !

இந்த அருமையான பாட்டை கேட்டு மகிழ்ந்து அன்னை அருள் பெறுவோம்...
malar pola malarkinra

Tuesday 3 July 2012

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ...






குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 



சரணம் - 1

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

சரணம் -2 

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

சரணம் - 3

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 



சரணம் - 4


கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி 
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

சரணம் - 5

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் 
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 

(பாடல் வரிகள்...நன்றி இணையத்திற்கு...)

நான் தஞ்சை பாணி ஓவியமாக வரைந்த
அந்தகோவிந்தன்...எம்பெருமான்  ஏழுமலயப்பனின்
ஓவியத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

Visit my other blog too...
http://ushasrikumar.blogspot.in/2012/03/sri-venkateshwara-tanjore-painting.html

Monday 2 July 2012

நர்த்தன கணபதி -தஞ்சாவூர் பாணி ஓவியம்





கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே 

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
(நன்றி -இணையம் )


ஆனந்த நடம் இடும் விக்ன ராஜனின்  திரு உருவத்தை தஞ்சை பாணி  ஓவியமாக வரைந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...