badge

Followers

Friday 7 September 2018

எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???



எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன???

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன😚 🌸*        👇👇

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்
ரங்கநாதருக்கு தேங்காய்த்
துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி,
வெண்ணெய், கீரையும்
நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
தினமும் இரவில்
அரவணை பிரசாதமும் உண்டு.

* திருவாரூர் தியாகராஜப்
பெருமானுக்கு நெய்யில்
பொறிக்கப்பட்ட
முறுக்கு தினசரி பிரசாதம்.

* திருக்கண்ணபுரம் சௌரிராஜப்
பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும்
அமுது செய்விக்கப்படுகிறது.

* காஞ்சிபுரம் வரதராஜப்
பெருமாளுக்கு சுக்கு, மிளகு,
கறிவேப்பிலை மணத்துடன் கூடிய
காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.

* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு
விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத்
தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.

* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில்
ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்
சோறும் பாகற்காய்
கறியுமே பிரசாதம்.

* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில்
விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

* ஸ்ரீமுஷ்ணம் பூவராக
மூர்த்திக்கு தினமும்
அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம்
செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக்
கருதப்படுகிறது.

* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்
சாறு பிழிந்து பாலுடன்
கலந்து ஈசனுக்கு நிவேதனம்
செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.

* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின்
போது சுரைக்காய் பிரசாதம்
படைக்கப்படுகிறது.

* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.

* கொல்லூர்
மூகாம்பிகைக்கு இரவு
அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்
தரப்படுகிறது.

* நெல்லையில் உள்ள
புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி,
வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.

* கேரளம், குருவாயூரில்
குருவாயூரப்பனுக்கு
சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

* திருச்சியில்
கோயிலடி அப்பக்குடத்தானுக்கு
தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.

* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும்
நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப்
பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில்
காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

* குற்றாலம் குற்றாலநாதருக்கும்
குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால்,
அவருக்கு தலைவலியும்
ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி
மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும்
தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.

*திருநெல்வேலி பூமாதேவி அம்மன்
ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று
கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி,
காய்கறிகள் எல்லாம்
சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு
தயாரிக்கப்படுவது தான்
கூட்டாஞ்சோறு.

* சிதம்பரம் நடராஜப்
பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள். ******    பற்றுக பற்றற்றான் பற்றினை  அப்பற்றை பற்றுக பற்று  விடர்க்க🌸

1 comment: