badge

Followers

Thursday 3 March 2016

அன்னாசி பழம்....சத்துக்களின் பெட்டகம்



இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாசி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.


2 comments:

  1. லண்டன், ஆக.26- புவியில் உள்ள
    உயிரினங்களின் எண்ணிக் கை நாம்
    அறிந்தவரை 12 லட்ச மாகும். ஆனால்
    அறியாத உயிரி னங்களின்
    எண்ணிக்கையோ 75 லட்சமாக
    இருக்கலாம் என்று சர்வ தேச
    ஆராய்ச்சியின் முடிவில் தெரிய
    வந்திருக்கிறது.

    80 நாடுகளிலிருந்து
    2,700 விஞ்ஞானிகள் கொண்ட ஸன் ஸஸ்
    ஆஃப் மெரீன் லைஃப் எனும் அமைப்பு
    2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
    உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின்
    மொத்த எண்ணிக்கையையும் அறி யும்
    பொருட்டு இந்த ஆராய்ச்சி
    தொடங்கப்பட்டது.

    பத்து வருட ஆராய்ச்சிக்குப் பிறகு,
    ஜீவராசிகளைப் பகுக்கும் முறையைக்
    கொண்டு இந்த எண் ணிக்கை
    கணக்கிடப்பட்டுள்ளது. பறவைகள்,
    பாலூட்டிகள் போன்ற
    அடிப்படையிலான இனக்குழு அளவில்
    உயிரினங் களைப் பிரித்து அவற்றின் உள்
    பிரிவுகளில் இருக்கக் கூடிய சிறிய
    பிராணிகளின் எண்ணிக்கையை
    அனுமானித்தனர்.

    இதில் நமக்கு
    ஏற்கெனவே நன்கு தெரிந்த பறவை, மீன்
    வகைகளைக் கொண்டு இந்த அனுமான
    முறையை சரி பார்த்தனர். அந்த
    சோதனையில் விஞ்ஞானி களின்
    கணக்கு சரியாக இருப்ப தாகத் தெரிய
    வந்தது. இதன் அடிப்படையில்
    உலகிலுள்ள மொத்த உயிரினங்களின்
    எண் ணிக்கையை அறிவித்திருக்கிறார்
    கள்.

    இவர்களின் கணக்குப்படி, உலகில் 87
    லட்சம் உயிரினங்கள் உள்ளன. இதில்
    ஏறத்தாழ 3 லட்சம் தாவர வகை, 6
    லட்சத்துக் கும் மேல் பூஞ்சை வகை
    உயிரி னங்கள் உள்ளன.

    இந்த
    ஆராய்ச்சியில் ஈடுபட்ட
    விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர்
    ஸனா ஆதில் கூறியது:

    உலகில்
    நம்மோடு உயிர் வாழும்
    உயிரினங்களில் கிட்டத் தட்ட 90 சதவிகித
    உயிர்களைப் பற்றி நமக்கு ஒன்றுமே
    தெரியாது. அப்படியிருக்கும்போது
    இந்த பூமியைக் கட்டிக் காப்பதில் நாம்
    பெரிய வெற்றியைக் காண வில்லை
    என்பதில் வியப்பில்லை என்றார்.
    ஆராய்ச்சியின் முடிவுகள் பப்ளிக்
    லைப்ரரி ஆஃப் ஸயன்ஸ் பயாலஜி எனும்
    ஆய்விதழில் வெளியிடப் பட்டுள்ளது.

    இந்தக் கணக்கின் அடிப்படையில்
    அனைத்து உயிரினங்களையும் நாம்
    கண்டுபிடித்துப் பட்டியலிட இன்னும்
    நூறு ஆண்டுகள் ஆகும் என்று
    இன்னொரு கணக்கையும் விஞ்ஞானிகள்
    கூறியுள்ளனர்.

    ReplyDelete
  2. //ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.//

    மிகவும் பயனுள்ள செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    இதில் தொடர்புடைய என் பதிவு :)
    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

    ReplyDelete