badge

Followers

Monday 26 December 2016

ஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு மனோதத்துவ அலசல்...



ஆணும் பெண்ணும் உடலால் மட்டும் அல்ல....உணர்வாலும், மூளையாலும் சமம் அல்ல...பல வித்தியாசங்கள் உண்டு...
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.
இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.


தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.

உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.


நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணம் இதுதான்...


5 comments:

  1. தெரிந்தவைகளே இவை என்றாலும் நல்லதமிழில் தெளிவாக எடுத்தியம்பியிருக்கிறீர்கள். நன்றி. இருப்பினும் இவை பொதுவான வேறுபாடுகளே. ஏனெனில், இருபாலரிடமே இக்குணங்கள் மாறி வெளிப்படும். அதாவது ஓவர்லாப்பிங்.

    Today Indian Express reports the result of a recent discovery: It is that pregnancy makes changes in the brain of a woman; and that results in her character change for ever. For men, such things are never possible. Please read it to widen your list.

    Some years ago, I read about another discovery by Russian psychologists: It is that a woman has an unconscious ability or intuition to know if anyone is following her. or any one is watching her without actually seeing. How can you see if anyone is coming from behind w/o turning? So, it is intutition only.

    One thing is missing from your list. Perhaps it is embedded therein but I am not able to decipher it. After all, I am unfortunate male lacking the ability to multi-tasking ! :-) It is that a woman is gregarious. (Of course you have referred to it when you said she wants to share her grievances with others) Not only grievances, all kinds of stuff she shares with other women. This is off-loading, thereby making her mind light. Good or bad, it results in one undesirable or unbearable trait namely she cannot like to be alone. She needs company: someone to talk to. In husband and woman relationship, it becomes a big problem. His silence kills her. If he is cold always, it is hell for her. The marriage may be on the rocks. But men don't like to share light talks with women. They think it is waste of time. However, cunning men use this trick to corner the gullible women: sharing light thoughts- more often silly - with her.

    All will have to face solitariness in life. It comes to us, when our children become adults and leave to seek their lives away from us. Husband gone or died. Relations are all become old. You are alone in the house. Or temporarily alone - as husband has gone to military or abroad. Your children in the hostel. Many women seek company of other women: to talk and talk. Suppose it is absolutely unavoidable; then hysteria strikes her.

    The same situation is beautifully faced by men. They like solitude. Long duration of living abroad alone is possible to them. As you have said, they seek pleasures outside too. Even when the solitude is compulsory, it is a cakewalk. In solitude alone, great achievements are possible/ Hence, they take science and only men become philosophers. For philosophical speculations company is enemy. Hence, there are no women philosopher.

    ReplyDelete
  2. அருமையான பதிவு க்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  3. ஏராளமான கோணங்களில் பலவித அலசல்கள்.

    //எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.//

    இந்தப்பதிவினில் உள்ள பல்வேறு விஷயங்களில் சிலவற்றைக்கூட என்னால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது போலிருக்கிறது.

    எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. உங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா? Open Locked Apps Without Password! - http://mytamilpeople.blogspot.in/2016/12/open-locked-android-apps-without.html

    ReplyDelete
  5. மிகச் சரி
    ஒப்புக்கொள்ள ஆண்களுக்கு
    பரந்த மனம் வேண்டும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete