badge

Followers

Sunday 14 September 2014

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....





தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...


2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...

.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......


4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....


5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...


காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்..

4 comments:

  1. காலப்போக்கில் இந்தப் பழமொழிகள் எப்படியெல்லாம் மாறிவிட்டன! சரியான பொருள் வரும்படி பழமொழிகளை எழுதியதற்கு நன்றி உஷா!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. பழமொழிகளின் உண்மையான விளக்கங்கள் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. எவ்வளவு தூரம் இவை இன்று தவறாகச் சொல்லப்படுகிறது !!!!!

    ReplyDelete
  3. அடடா? இப்படியெல்லாமா? மாறும். இதை நீங்களே சிந்தித்தீர்களா?
    " உப்பிட்டவரை உள்ளளவும் நினை" எனும் பழமொழி ஏதோ உணவுக்கு உப்புப் போட்டுச் சமைத்தவர்களை மறக்கக் கூடாதெனும் கருத்துடன் புழக்கத்தில் உள்ளது.
    எனக்கு ஏதோ அப்படி அல்ல! வேறு ஏதோ மேற்கூறியவைபோல் இருக்கும் போலுள்ளது, அறிந்து கூறுங்கள்.

    ReplyDelete
  4. இந்தப் பழமொழிகள் எப்படியெல்லாம் மாறிவிட்டன....

    ReplyDelete