badge

Followers

Friday 27 October 2017

ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...



ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...


 பாபாவின் உதியானது...


1, பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வை தருகிறது.
2, நோயிலிருந்து நிவாரணம் தருகிறது.
3, படிப்பு வராதவர்களுக்கு படிப்பைத் தருகிறது.
4, வேலையில்லாதவர்களுக்கு வேலை தருகிறது.
5, திருமணம் தடைப்பட்டால்,அதை நிவர்த்தி செய்து நல்ல வாழ்க்கை தருகிறது.
6, பிள்ளைப் பேறு இல்லாமல் போனால்,பிள்ளை வரம் தருகிறது.
7, காணாமல் போனவர்களை கண்டுப்பிடித்துத் தருகிறது.
8, இருந்து உபத்திரவம் தருகிறவர்களக விலக்கி வைக்கிறது.
9, பிரிந்தவர்களை சேர்க்கிறது, சேரக்கூடதவர்கள் சேர்ந்து இருந்தால் அவர்களைப் பிரிக்கிறது.
10, போகும் வழிகளில் ஆபத்து நேராமல் காக்கிறது.ஆபத்து வந்துவிட்டால் உதவி செய்கிறது.
11, வறுமை தரும் வெறுமையை மாற்றுகிறது,வளத்தைக் கொண்டுவந்து நம் காலடியில் கொட்டுகிறது.
12, மனதை மாற்றி நம்மை நல்லவராக மாற்றுகிறது. தீய நடத்தைகளைத் தேய்த்துவிடுகிறது.

 உதியால் நடக்காதது ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லாவற்றையும் செய்கிறது.

உடலையும்,மனதையும் ஒரு சேர மாற்றுவதில் இந்த உதிக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதால் தான் பாபாவின் உதிக்கு அவ்வளவு மகத்துவம்.இந்த மகத்துவத்தை  அனுபவித்த சாய் பக்தர்கள் ஏராளமானவர்கள்.அந்த அனுபவத்தை அவர்கள் பிறருக்கு உதியைத் தந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி உதியைத் தருபவர்களே நாளடைவில் அடியார்கள் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்கிறார்கள்.
ஓம் சாய் ராம்.


1 comment:

  1. ஓம் சாய் ராம்.
    உதியின் மகிமை அருமை.

    ReplyDelete