badge

Followers

Tuesday 29 July 2014

சுக்கின் மருத்துவப் பயன்கள்...






"சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை...
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய  தெய்வமும் இல்லை..."
இந்தப் பழமொழியை  நீங்கள் எங்காவது கேட்டிருப்பீர்கள்...

அப்படியென்ன மருத்துவ குணங்கள் சுக்கில் அடங்கி இருக்கின்றன  என்று பார்ப்போமா...

நம் அடுக்களையில் உள்ள இந்த அருமருந்தை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளவோம்...



1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2.சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4.சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5.சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6.சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7.சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.


8.சுக்கு ,வெந்தயம்,மிளகு ஆகியவற்றை 1:3:1/2 என்ற விகிதத்தில் கலந்து பொடித்து தினமும் மோரில் 1 டீஸ்பூன் கலந்து பருகிவந்தால் செரிமானத் தொல்லைகள் நீங்கும்.

9.சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11.சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12.சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14.சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15.சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.




17.தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18.சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19.சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோர்வை நீங்கும். 


20.சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

(படித்ததில் பிடித்தது)

2 comments:

  1. சுக்கைப்பற்றிய தகவல்களை சுக்கு நூறாக அலசிக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.

    முத்தான முத்தல்லவா பாட்டுப்போல ...........

    சுக்கான சுக்கல்லவா எனப்பாடலாம் போலிருக்கு.

    இஞ்சி காய்ந்தால் சுக்கு என்பார்கள்.

    சுமங்கலிப்பிரார்த்தனைகளில் வயிறு முட்ட சாப்பிட்ட சுமங்கலிகளுக்கு, இளநீர், பானகம், நீர்மோர் முதலியன கொடுத்து உபசரித்துவிட்டு, கடைசியாகக் கொஞ்சம் சுக்கு வெல்லம் எனத்தருவார்கள். ஜீரணத்திற்காக இருக்குமோ என்னவோ. அதன் பின் புதுப்புடவை உடுத்தச்சொல்லிக் கொடுத்து, நலங்கு மஞ்சள் பூசி தாம்பூலம் தரிக்கச்சொல்லி, மங்கலப்பொருட்களெல்லாம் கொடுத்து அனுப்பிவைப்பார்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,சார்
      சுக்குவெல்லம் ஜீரணத்துகாகதான் தரப்பட்டது என்றே நான் நம்புகிறேன்...

      Delete