badge

Followers

Tuesday 22 November 2016

கடுக்காயின் நன்மைகள்






கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்பது பழமொழி

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

4 comments:

  1. கடுக்காய் பற்றி, சும்மா கடுக்காய் கொடுக்காமல், மிகவும் பயனுள்ள தகவல்களாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். :) மிக்க மகிழ்ச்சி, மேடம்.

    ReplyDelete
  2. தங்களின் இந்தப் பதிவினைப் படித்ததால் ஏற்பட்டுள்ள விளைவுகள்:

    இங்கு என் வீட்டிலிருந்து 10 நிமிடம் நடக்கும் தூரத்தில் ஓர் கடை உள்ளது. சகலவிதமான பொடி வகைகளும் அங்கு விற்கப்படுகிறது. அங்கு சென்று As a Trial Basis கீழ்க்கண்டவைகளைக் கொஞ்சமாக இப்போதைக்கு வாங்கி வந்துள்ளேன். தேவையானால் அவ்வப்போது போய் மேலும் ஃப்ரெஷ் ஆக வாங்கிக்கொள்ளலாம்.

    கடுக்காய் பவுடர் 100 கிராம் ரூ. 40 க்குக் கிடைத்தது.

    சுக்குப் பவுடர் 25 கிராம் ரூபாய் 25 க்குக் கிடைத்தது.

    இஞ்சி மட்டும் இப்போதைக்கு ரூ. 5 கொடுத்து வேறு ஒரு காய்கறிக்கடையில் வாங்கிக்கொண்டு வந்துள்ளேன். குளிர்சாதனப்பெட்டியில் அந்த இஞ்சியை ஒரு ஓரமாக எனக்காகவே பிரத்யேகமாக வைத்துள்ளேன்.

    இஞ்சியை நன்கு அலம்பிவிட்டு, தோல் சீவாமலேயே சிறு துண்டமாக நறுக்கிப்போட்டு சாறு பிழியும் மெஷின் ஒன்று மிகவும் காஸ்ட்லியாக துபாயிலிருந்து 2004-இல் வாங்கி வந்து வெட்டியாக 12 வருஷங்களாக பாதுகாத்து வைத்துள்ளேன். அது இன்றும் துருப்பிடிக்காமல் புத்தம்புதிதாக ஜோராக உள்ளது. அதையும் வீட்டில் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டுபிடித்து என் அருகே வைத்துக்கொண்டு விட்டேன்.

    நாளை முதல் 48 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறு, மதியம் சுக்குப்பொடி, இரவு படுக்கும் முன்பு கடுக்காய்ப்பொடி ஆகியவற்றை, உங்கள் அறிவுரைப்படி வெந்நீரில் கலந்து குடித்துவிடலாம் என நினைத்துள்ளேன்.

    எப்படியோ என் சோம்பலும் கிழட்டுத்தனமும் போய், வாலிப உற்சாகமும் பேரெழுச்சியும் திரும்பினால் சரியே ! :)

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். பார்ப்போம்.

    ReplyDelete
  3. இன்னொரு மிகப்பெரிய பின்னூட்டம் அளித்திருந்தேன். தாங்கள் ஏனோ அதனை இதுவரை வெளியிடவே இல்லை. ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் SPAM போன்ற எங்காவது மாட்டிக்கொண்டு இருக்கலாம். Please check-up Madam.

    ReplyDelete