badge

Followers

Thursday 2 February 2017

எட்டுக்குள் ஒரு யோகா




எட்டுக்குள் ஒரு யோகா!!!
எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.
நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும்.
இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர் சித்தர்கள்.
காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.
*இதை செய்வதால் என்ன நடக்கும்!*
பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம். இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம். நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை). குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும். கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம். கேட்கும் திறன் அதிகரிக்கும். உடல் சக்தி பெருகும், ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும். குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும். ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும். பாத வலி, மூட்டுவலி மறையும். சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், அந்த வடிவம் *முடிவில்லாதது* மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சமநிலை படுத்துகிறது. மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்!! உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும், உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும், நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம், உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்!! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும்.
காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள், ஆண்கள் வலது கை பக்கம் -- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும், ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 15 நிமிடம் நடக்கணும், பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 15 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், மொத்தம் முப்பது நிமிடம்!!
*1வது 21 நாளில* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி, இடகலை நாடி புத்துயிர் பெரும்!!!, *2 வது 21 நாளில்* மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்!!!, *3 வது 21 நாளில்* தொடை பகுதி பலம் பெரும்!!!, *4 வது 21 நாளில்* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும்!!!, *5 வது 21 நாளில்* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்!!!, *6 வது 21 நாளில்* இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்!!!


Courtesy -net

1 comment:

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள். ஏற்கனவே வேறொருவர்கூட தன் பதிவில் இதனைப்பற்றி இதுபோல விரிவாக எழுதியிருந்தார். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete